<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5421002999192488936</id><updated>2011-11-10T07:54:06.243-08:00</updated><category term='ஹம்பி'/><category term='கென் வில்பர்'/><category term='ஏன்?'/><title type='text'>குரங்குத்தவம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kuranguththavam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kuranguththavam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Baraka</name><uri>http://www.blogger.com/profile/12445162472826229664</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='14' src='http://bp0.blogger.com/_7TdbNvsYnI8/SEZU-MxQQqI/AAAAAAAAANo/Of3lyg2h3L4/S220/baraka0039.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>12</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5421002999192488936.post-1349563652827796330</id><published>2009-01-26T05:42:00.001-08:00</published><updated>2009-01-26T05:42:40.261-08:00</updated><title type='text'>கடவுளுடன் பிரார்த்தித்தல்</title><content type='html'>&lt;p&gt; இன்று நீ&lt;br /&gt;கைவிடப்பட்டிருக்கிறாய்  &lt;/p&gt; &lt;p&gt; அல்லது அது&lt;br /&gt;உன்னைப் போன்ற&lt;br /&gt;யாரோ ஒருவராகவும் இருக்கலாம்  &lt;/p&gt; &lt;p&gt; இது உனக்கு நிகழ்வது&lt;br /&gt;எத்தனையாவது முறை&lt;br /&gt;என்று நீ எண்ண வேண்டியதில்லை  &lt;/p&gt; &lt;p&gt; ஒரு குழந்தையாக&lt;br /&gt;மீண்டும் பிறப்பதுபோல&lt;br /&gt;ஒரு துரோகத்திலிருந்து&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;ஒரு கைவிடப்படுதலிருந்து&lt;br /&gt;நீ புத்தம் புதியதாய்&lt;br /&gt;உன் பூமிக்குத் திரும்புகிறாய்  &lt;/p&gt; &lt;p&gt; நீ கைவிடப்படும்போதுதான்&lt;br /&gt;உன் பிரியத்தின் கனல் எரியத் தொடங்குகிறது&lt;br /&gt;பிரியமற்றுக் குளிர்ந்த ஒவ்வொரு கரத்தையும்&lt;br /&gt;அந்தக் கனல் வெதுவெதுப்பாக்குகிறது  &lt;/p&gt; &lt;p&gt; கைவிடப்படும்போது&lt;br /&gt;நீ தனியாக இருப்பதாக உணர்கிறாய்&lt;br /&gt;ஆனால் நாம் தனியர்கள் அல்ல  &lt;/p&gt; &lt;p&gt;  இந்த உலகம்&lt;br /&gt;கைவிடப்பட்ட பெண்கள்&lt;br /&gt;கைவிடப்பட்ட குழந்தைகள்&lt;br /&gt;கைவிடப்பட்ட முதியவர்கள்&lt;br /&gt;கைவிடப்பட்ட குடிகாரர்கள்&lt;br /&gt;கைவிடப்பட்ட பைத்தியங்கள்&lt;br /&gt;கைவிடப்பட்ட உபயோகமற்றவர்கள்&lt;br /&gt;கைவிடப்பட்ட நோயாளிகள்&lt;br /&gt;கைவிடப்பட்ட உடல் சிதைக்கப்பட்டவர்கள்&lt;br /&gt;கைவிடப்பட்ட தண்டிக்கப்பட்டவர்கள்&lt;br /&gt;கைவிடப்பட்ட காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்&lt;br /&gt;கைவிடப்பட்ட கிறிஸ்துகளின்&lt;br /&gt;உலகம்  &lt;/p&gt; &lt;p&gt; அரவணைக்கப்பட்டவர்களைக் காட்டிலும்&lt;br /&gt;பிரமாண்டமாக வளர்ந்துவிட்டது&lt;br /&gt;கைவிடப்பட்டவர்களின் சமூகம்&lt;br /&gt;நாம் பயப்பட ஒன்றுமில்லை  &lt;/p&gt; &lt;p&gt; கைவிட்டவர்களை&lt;br /&gt;நாம் தண்டிக்கவோ&lt;br /&gt;மன்னிக்கவோ ஒன்றுமே இல்லை  &lt;/p&gt; &lt;p&gt; மாறாக கைவிடப்படுதல் துக்கமல்ல&lt;br /&gt;ஓரு நீண்ட கனவு தரும் களைப்பு  &lt;/p&gt; &lt;p&gt; ஒரு பழக்கத்தை விட்டுவிடும் சமன்குலைவு&lt;br /&gt;&lt;/p&gt;                                                                                      - மனுஷ்ய புத்திரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5421002999192488936-1349563652827796330?l=kuranguththavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kuranguththavam.blogspot.com/feeds/1349563652827796330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5421002999192488936&amp;postID=1349563652827796330' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/1349563652827796330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/1349563652827796330'/><link rel='alternate' type='text/html' href='http://kuranguththavam.blogspot.com/2009/01/blog-post.html' title='கடவுளுடன் பிரார்த்தித்தல்'/><author><name>Baraka</name><uri>http://www.blogger.com/profile/12445162472826229664</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='14' src='http://bp0.blogger.com/_7TdbNvsYnI8/SEZU-MxQQqI/AAAAAAAAANo/Of3lyg2h3L4/S220/baraka0039.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5421002999192488936.post-8826068535211169116</id><published>2008-11-14T16:01:00.000-08:00</published><updated>2008-11-14T16:03:55.812-08:00</updated><title type='text'></title><content type='html'>"எல்லாம் யோசிக்கும் வேளையில்&lt;br /&gt;பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்"&lt;br /&gt;                          &lt;br /&gt;&lt;div id=":1p8" class="ArwC7c ckChnd"&gt;&lt;wbr&gt;         -- தாயுமானவர் சொன்னதாக பாண்டியன் சொல்வது, ‘புயலிலே ஒரு தோணி'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆயிரம் காகத் திரையை&lt;br /&gt;செவ்வலகால் கிழித்து வந்து&lt;br /&gt;என் முன் அமர்ந்து நொடுக்கும்&lt;br /&gt;இவ்வெண் பறவையின் முன்&lt;br /&gt;செயலற்று அமர்ந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணங்கள் மீது&lt;br /&gt;கவிகிறது வெண்மை.&lt;br /&gt;சஞ்சலங்கள் மீது&lt;br /&gt;கவிகிறது வெண்மை.&lt;br /&gt;இருத்தல் மீது&lt;br /&gt;கவிகிறது முடிவற்ற வெண்மை..."&lt;br /&gt;&lt;br /&gt;                              &lt;wbr&gt;                        - அஜிதன், விஷ்ணுபுரம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5421002999192488936-8826068535211169116?l=kuranguththavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kuranguththavam.blogspot.com/feeds/8826068535211169116/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5421002999192488936&amp;postID=8826068535211169116' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/8826068535211169116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/8826068535211169116'/><link rel='alternate' type='text/html' href='http://kuranguththavam.blogspot.com/2008/11/blog-post.html' title=''/><author><name>Baraka</name><uri>http://www.blogger.com/profile/12445162472826229664</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='14' src='http://bp0.blogger.com/_7TdbNvsYnI8/SEZU-MxQQqI/AAAAAAAAANo/Of3lyg2h3L4/S220/baraka0039.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5421002999192488936.post-5416670447005197483</id><published>2008-07-27T02:28:00.000-07:00</published><updated>2008-07-27T02:30:07.551-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SIxABm_JthI/AAAAAAAAATQ/28V52f-593M/s1600-h/collage.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SIxABm_JthI/AAAAAAAAATQ/28V52f-593M/s400/collage.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5227623663859774994" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5421002999192488936-5416670447005197483?l=kuranguththavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kuranguththavam.blogspot.com/feeds/5416670447005197483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5421002999192488936&amp;postID=5416670447005197483' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/5416670447005197483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/5416670447005197483'/><link rel='alternate' type='text/html' href='http://kuranguththavam.blogspot.com/2008/07/blog-post_27.html' title=''/><author><name>Baraka</name><uri>http://www.blogger.com/profile/12445162472826229664</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='14' src='http://bp0.blogger.com/_7TdbNvsYnI8/SEZU-MxQQqI/AAAAAAAAANo/Of3lyg2h3L4/S220/baraka0039.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SIxABm_JthI/AAAAAAAAATQ/28V52f-593M/s72-c/collage.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5421002999192488936.post-7563883463368816541</id><published>2008-07-26T10:20:00.000-07:00</published><updated>2008-07-26T10:41:14.055-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SIthqZS7ELI/AAAAAAAAATI/kcllBgQL4NE/s1600-h/picasabackground.bmp.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SIthqZS7ELI/AAAAAAAAATI/kcllBgQL4NE/s400/picasabackground.bmp.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5227379173466247346" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SIterKLmo1I/AAAAAAAAASw/_ldvv_wLBT8/s1600-h/242506129_9b4439a4ba_o.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5421002999192488936-7563883463368816541?l=kuranguththavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kuranguththavam.blogspot.com/feeds/7563883463368816541/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5421002999192488936&amp;postID=7563883463368816541' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/7563883463368816541'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/7563883463368816541'/><link rel='alternate' type='text/html' href='http://kuranguththavam.blogspot.com/2008/07/blog-post_2026.html' title=''/><author><name>Baraka</name><uri>http://www.blogger.com/profile/12445162472826229664</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='14' src='http://bp0.blogger.com/_7TdbNvsYnI8/SEZU-MxQQqI/AAAAAAAAANo/Of3lyg2h3L4/S220/baraka0039.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SIthqZS7ELI/AAAAAAAAATI/kcllBgQL4NE/s72-c/picasabackground.bmp.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5421002999192488936.post-3738376222023708926</id><published>2008-07-26T10:03:00.000-07:00</published><updated>2008-07-26T10:04:15.972-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SItZAQ4KAGI/AAAAAAAAASI/b6EvUy3Vr2k/s1600-h/Photo12_13A.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SItZAQ4KAGI/AAAAAAAAASI/b6EvUy3Vr2k/s400/Photo12_13A.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5227369653558968418" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5421002999192488936-3738376222023708926?l=kuranguththavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kuranguththavam.blogspot.com/feeds/3738376222023708926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5421002999192488936&amp;postID=3738376222023708926' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/3738376222023708926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/3738376222023708926'/><link rel='alternate' type='text/html' href='http://kuranguththavam.blogspot.com/2008/07/blog-post_26.html' title=''/><author><name>Baraka</name><uri>http://www.blogger.com/profile/12445162472826229664</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='14' src='http://bp0.blogger.com/_7TdbNvsYnI8/SEZU-MxQQqI/AAAAAAAAANo/Of3lyg2h3L4/S220/baraka0039.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SItZAQ4KAGI/AAAAAAAAASI/b6EvUy3Vr2k/s72-c/Photo12_13A.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5421002999192488936.post-9208950130338067687</id><published>2008-07-10T05:01:00.000-07:00</published><updated>2008-07-10T05:11:37.973-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹம்பி'/><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SHX8JXl8FeI/AAAAAAAAASA/q1GbnFHe0I4/s1600-h/289612053_95df445e8a_o.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SHX8JXl8FeI/AAAAAAAAASA/q1GbnFHe0I4/s400/289612053_95df445e8a_o.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5221356580888122850" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5421002999192488936-9208950130338067687?l=kuranguththavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kuranguththavam.blogspot.com/feeds/9208950130338067687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5421002999192488936&amp;postID=9208950130338067687' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/9208950130338067687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/9208950130338067687'/><link rel='alternate' type='text/html' href='http://kuranguththavam.blogspot.com/2008/07/blog-post.html' title=''/><author><name>Baraka</name><uri>http://www.blogger.com/profile/12445162472826229664</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='14' src='http://bp0.blogger.com/_7TdbNvsYnI8/SEZU-MxQQqI/AAAAAAAAANo/Of3lyg2h3L4/S220/baraka0039.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SHX8JXl8FeI/AAAAAAAAASA/q1GbnFHe0I4/s72-c/289612053_95df445e8a_o.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5421002999192488936.post-5297244887182179348</id><published>2008-07-07T01:56:00.000-07:00</published><updated>2008-07-07T05:08:30.312-07:00</updated><title type='text'>பறக்கும் யானையும் மண்ணில் வேரூன்றி நிற்கும் ஒரு பறவையும் - பாகம் 2</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;div style="text-align: center; color: rgb(102, 102, 102);"&gt; &lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;“Nothing exists except atoms and empty space; everything else is opinion”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;           &lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;- Democritus&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"The whole is greater than the sum of its parts."&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;      - Aristotle&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;”உண்மைநிலை(Reality) என்பதின் அடிப்படை இயல்பு என்ன? அது எதனால் ஆனது? பூரண-முழுமையினாலா (wholistic)? அல்லது பிளவுபடா மூலாதார துகள்களாலா? (Atomistic)" . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடாமிஸத்திற்கும், ஹோலிஸத்திற்கும் இடையே நடந்து வரும் இந்த சண்டை மெய்யியலின் முக்கியமான பிரச்சனைககளில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;கிரேக்க மெய்யியலில் டெமாகிரடஸை அடாமிஸத்தின் தொடக்கப் புள்ளி எனலாம். இப்பிரபஞ்சம் பிளவுபடா மூலாதார துகள்கலான அணுக்களால் ஆனது என்றும் அனைத்து பருப்பொருட்களும்(Matter) அணுக்கள் சூனியத்தில்(void) சிதறி மாறுபடுவதற்கு ஏற்ப மாறுபடுகின்றன என்றும் கூறினார். (அதற்கு முன்பு தால்ஸ் உண்மைநிலையின் மூலாதாரம் தண்ணீர் என்றும், அனாக்ஸிமெனஸ் காற்று என்றும், ஹெராகிளடஸ் நெருப்பு என்றும் கூறி வந்தாலும் டெமாகிரட்ஸ்ஸே அடாமிஸட்தின் துவக்கப் புள்ளியாக கருதப்படுகிறார்). அணுக்கள் என்னற்ற அளவுகளில், வடிவங்களில் உள்ளன என்றாலும் அவற்றின் ஆதார இயல்பு ஒன்றே என்றும் அணுக்களும், சூனியமும் தொடக்கமும், முடிவும் இன்றி போய்க்கொண்டே இருப்பவை என்றும் டெமாகிரடஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மற்றொருபுரம் பரமெனிடிஸ் என்பவர் சூனியமும், மாற்றமும் ஒருவித மாயை என்றும் இப்பிரபஞ்சம் அனைத்தும் உள்ளடக்கப்பட்ட ஒரு மாற்றமில்லா முழுமையினால் ஆனது என்றும் கூறி வந்தார். இவ்வாறு டெமாகிரடஸும் அவரது சீடர்களும் அடாமிஸத்தையும் பரமெனிடிஸும் அவரது சீடர்களும் ஹோலிஸத்தையும்(Wholism) வலியிறுத்திக் கொண்டு இருந்தார்கள். அதன் பிறகு பிளாட்டோ, அரிஸ்டாடில், எபிகியூரஸ் என்று தொடர்ந்து நடந்த இவ்விவாதம் பலவகைகளில் மறுஆக்கம் செய்யப்பட்டது. (அடாமிஸம் மற்றும் ஹோலிஸம் என்பது மேற்கத்திய மரபில் மட்டும் அல்லாமல் நம் மரபிலும் உள்ளது. நியாயவைசேஷிகத்தில் அடாமிஸக் கோட்பாடுகள் சிலவற்றைப் பார்க்கலாம். அதே போல் நியாயா மற்றும் மீமாம்ச தரிசனங்களில் முழுமை(a-KshanDa) மற்றும் சிதறல்(KshanDa) போன்ற கருத்துகளைக் காணலாம். இதே போல் பௌதத்திலும் உள்ளது. இவை அடாமிஸம் மற்றும் ஹோலிஸம் போல் தோன்றினலும் பல நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. இது பற்றி நான் இப்பொழுது படித்து கொண்டு இருப்பதால் விரிவாக எழுத முடியவில்லை. ஜெயமோகனின் கீதை குறித்த கட்டுரைகள் இது பற்றி விரிவாகப் பேசுகின்றன).&lt;br /&gt;&lt;br /&gt;அரிஸ்டாடிலின் வருகைக்குப் பிறகு அடாமிஸம் வலுவிழந்தது. பிறகு மறுமலர்ச்சி காலத்தின் போது அடாமிஸம் மீண்டு எழுந்தது. பிரான்ஸிஸ் பேகன், கலிலியோ, தெகார்த்தே போன்றோர் மீண்டும் அடாமிஸக் கோட்பாடுகளை வலியுறுத்தத் தொடங்கினார்கள். பிரபஞ்சம் என்பது பிளவுபடா மூலாதார துகள்கலான அணுக்களால் ஆனது என்ற ஜான் டால்டனின் ‘அணுக் கொள்கை' போன்றவைகளால் அடாமிஸம் மேலும் வலுவடைந்தது. அணுக் கொள்கைக்குப் பிறகு ஹோலிஸம் அதோடு அவ்வளவுதான் என்றும் நம்பப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஜே.ஜே.தாம்சன் எலக்டரானைக் கண்டுபிடித்தார். விரைவில் அணுக்கருவும், அணுக்கருவில் உள்ள ப்ரோடானும், நியுட்ரானும் கண்டுபிடிக்கப்பட்டது. அணுக்களே பிளவுபடா அடிப்படை அலகு என்ற நம்பிக்கை இவ்வாறு தகர்க்கப்பட்டது. அதன் பின்னர் ப்ரோட்டானும், நியுட்ரானும் தான் பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு என்று நம்பப்பட்டது. சில காலம் கழித்து அவையும் அடிப்படை அலகு அல்ல என்றும் ஒர் அடிப்படை துகளின் சுற்றுக்கேற்ப(spin) அவை ஃபெர்மியான்களாகவும்(Fermion), போஸான்களாகவும்(Boson) இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஃபெர்மியான்களுல் குவார்க்ஸ், லெப்டான்ஸ் மற்றும் போஸான்களுல் காஜ் போஸான், ஹிக்ஸ் போஸான் என்று பல பிரிவுகள். அதனிலும் பல உட்பிரிவுகள். (இயற்பியல் பற்றிய பதிவு அல்ல இது என்பதால் இவை பற்றி மேலோட்டமாக பார்ப்போம்). அதே சமயம் ஃபேரடேவின்(Faraday) கொள்கைகளை உபயோகித்து ஜேம்ஸ் கிளெர்க் மாக்ஸ்வெல் எலக்ரோமேக்னடிக் கோட்பாடை முன்வைத்தார். தொடர் அலைகள் (continuum field) என்ற மாக்ஸ்வெல்லின் தியரியானது திட்டவட்ட அடிப்படை அலகு என்ற நோக்குடைய அடாமிஸத்திற்கு மேலும் சவாலை உண்டாக்கியது. பிறகு வந்த ஹிஸன்பெர்க், மாக்ஸ் பிளான்க், பால் டிராக், உல்ஃப்காங் பாலி, நீல் போர், ஷ்ரோடிங்கர், ஐன்ஸ்டைன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட குவாண்டம் மெக்கானிக்ஸ் இவ்வகை அடிப்படை துகள்களை வரையருப்பதில் உள்ள சிக்கல்களைக் கோடிட்டு காட்டியது. Grand Unification Theory, String Theory (அல்லது M-theory) போன்றவை அனைத்து சக்திகளையும் உள்ளடக்கி விளக்கக்கூடிய திசையை நோக்கி இன்று சென்று கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டெமாகிரடஸில் ஆரம்பித்து இன்று வரை நாம் வெகு தூரம் வந்திருந்தாலும் இன்றும் கூட அடிப்படை மூலாதார துகள்கள் குறித்த திட்டவட்ட, உறுதியான வரையருகள் எதுவும் இல்லை என்பதே உண்மை. இவைகள் யூகங்களாகவும், ஹேஷ்யங்களாகவும் தான் இன்றும் இருந்து வருகின்றன. புகழ்பெற்ற விண்பௌதீக விஞ்ஞானியான ஆர்தூர் எடிங்டனிடம் ஒருவர் குவாண்டம் இயற்பியலை ஒரே வரியில் விளக்க முடியுமா என்று கேட்டதற்கு அவர், ‘Something unknown is doing we don’t know what' என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒருபுறம் இருக்க மறுபுரம் ஹோலிஸம்(Wholism) என்பதற்கு பரமெனிடிஸ் கூறிய விளக்கமான, 'அனைத்தும் உள்ளடக்கப்பட்ட ஒரு மாற்றமில்லா முழுமை (all-encompassive, unchanging unity)' என்பது  'அனைத்தையும் உள்ளடக்கி முன்னேறும் முழுமை' (all-encompassive, evolving unity) என்பதாக மறுஆக்கம் செய்யப்பட்டது. ஜான் ஸ்மட்ஸ் (Jan Smuts) என்பவர் இந்த மறுஆக்கம் செய்யப்பட்ட வேறுபாடைத் தெளிவுபடுத்துவதற்காக 'Wholism' என்பதற்கு பதில் ‘Holism' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார்.  ஹோலிஸம்(Holism) என்பதை “"The tendency in nature to form wholes that are greater than the sum of the parts through creative evolution." என்று விளக்கினார். அரிஸ்டாட்டிலின் மறுவருகை போல்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்பியல் உட்பட பல்வேறு துறைகளில்  ஹோலிஸ முழுமை நோக்கிற்கான அறைக்கூவல் விடுக்கப்பட்டது. (Call for a holistic approach). ஹோலிஸத்திற்கு பலவகை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ”குவாண்டம் மீபொருண்மைவாதம்”(Quantum Mysticism) போன்றவை உண்மைநிலை என்பது குவார்க், ப்ரோட்டான், அணு, செல், மனிதர்கள், செடிகள், நட்சத்திரங்கள், கோள்கல், மண்டலங்கள் போன்ற தனி நிறைக்கூறுகள்(seperate entities) அல்ல என்றும் இவைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே இருக்கும் ஒரு மாபெரும் சங்கிலித்தொடர் போன்றவை என்று வலியுறுத்த ஆரம்பித்தன. விவேகானந்தர் உட்பட பலர் நவீன பௌதீகம் வந்தடைந்த முடிவுகளை பலநூறாண்டுகளுக்கு முன்பே வேதாந்தம் கண்டைந்துள்ளது என்று கூறினர். இவ்வகை விளக்கங்கள் பல இயற்பியல் விஞ்ஞானிகளைக் கோபம் கொள்ளச் செய்தது. குவாண்டம் இயற்பியலின் போதாமைகளை ஒத்துக் கொண்ட ஆர்துர் எடிங்டன் கூட இவ்வகை நோக்குகளை - "We should suspect an intention to reduce God to a system of differential equations. That fiasco at any rate must be avoided." என்று கடுமையாக விமர்சித்தே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹோலிஸ நோக்கை ஆதாரமாகக் கொண்டு பலவகை அணுகுமுறைகள் உருவாக ஆரம்பித்தன. சிஸ்டம்ஸ் தியரி(Systems theory), காம்ப்லெக்ஸிடி தியரி(Complexity theory), சைபர்நெடிக்ஸ்(Cybernetics) என்று பல. ஒரு துறைசார் கொள்கைகளில் உள்ள போதாமைகளை உணர்ந்து பல்வேறு துறைகளின், அமைப்புகளின் உதவியோடு பல cross-domain, multi-disciplinary அராய்ச்சி மையங்கள் உருவாக்கப்பட்டன. உளவியல் மற்றும் மருத்துவத்தில் இருந்து மானுடவியல், கல்வி, சுகாதாரம், சூழலியல் வரையிலான பல்வேறு துறைகள் இவ்வகை ஆராய்ச்சி முறைகளுக்கு உட்படுத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு வந்த பின்அமைப்புவாதமும்(Poststructuralism), பின்நவீனத்துவமும்(Postmodernism) இவ்வகை முழுமுதற் உண்மை, ஒருமை, ஒட்டுமொத்த சாராம்ச நோக்கு போன்றவற்றுக்கு எதிர்குரலாக அமைந்தது. அடாமிஸமும் சரி ஹோலிஸமும் சரி கருத்ததிகார நோக்கையே ஆதாரமாகக் கொண்டது என்றும் ஒன்றை அடக்கி மற்றொன்றை மீட்க முயலும் ஆதிக்கவிருப்புறுதியே இவ்வகை கோட்பாடுகளின் அடிப்படை என்று பின்நவீனத்துவம் கூறியது. தெலூஸ்(Deleuze) மற்றும் கத்தாரி(Guattari) அடாமிஸம் மற்றும் ஹோலிஸதிற்கு பதில் ‘ரிசோம்' (Rhizome) என்ற கூற்றை முன்வைத்தார்கள். ரிசோம் திட்டவட்ட பகுப்புமுறைகளுக்கும், வரைமுறை அமைப்புகளுக்கும்(arborescence), அடுக்குகளுக்கும்(hierarchy) எதிரானது. உதாரணமாக கல்விப் பாடத்திட்ட வடிவமைப்பில் காணப்படும் நிபுணர்சார்ந்த மைய திட்டமைப்புக்கு(centralized design done by specialists) எதிரான ஒன்று ரிசோமாட்டிக் முறை. இவ்வகை திட்டங்களை ஒற்றைக் குழுவால் ஏற்படுத்தவே முடியாது என்றும் இவற்றை பல தரப்பினரும் சேர்ந்து விவாதித்தே ஒரு முடிவுக்கு வர முடியும் என்றும் கூறுகிறது. கல்வி மற்றும் கற்றல் என்பது தொடர் Negotiation என்றும் தனி ஒருவரின் தன்மைக்கேற்ப இவ்வகை திட்டங்களை எந்த நேரத்திலும் மாற்றி அமைக்கக்கூடிய வசதி இருக்க வேண்டும் (multiple entry and exit points) என்றும் வலியிறுத்துகிறது. இன்று தகவல் தொழில் நுட்பத்தில் உள்ள போக்கான Web2.0வில் காணப்படும் Folksnomies, Wikinomics, User-Generated content, Wisdom of the crowds, Collaborative content development, Long Tail business models போன்ற முறைகள் ஒருவகையில் ரிசோமாட்டிக்கின் அடிப்படையிலேயே அமைந்துள்ளவைகளே.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு சிறந்த வழிமுறையாக இருந்தாலும் இவற்றிலும் சில குறைபாடுகள் உள்ளன. ரிசோம் போன்ற ஒரு வழிமுறையைக் கொண்டு உளவியல், மருத்துவம் போன்ற துறைகளில் ஆராய்ச்சிகள் எதையும் சரிவர செய்ய முடியவில்லை என்பதே உண்மை. ஒரு வகையில் திட்டவட்ட ‘ஆராய்ச்சி முடிவுகள்', ‘நிபுணத்துவம்' போன்றவற்றையே அது நிராகிக்கிறது. இப்படி இருக்க ஒரு நரம்பியல் நோய்க்கூறுக்கோ அல்லது ஒரு இருதயம் சார்ந்த கோளாறுக்கோ திடமான பரிந்துரைகளை எப்படி ஒரு மருத்துவரால் கொடுக்க இயலும்? இவ்வாறு இம்முறையிலும் பல போதாமைகள் இனம் காணப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறியவைகள் அனைத்தும் சிறு எளிமைப்படுத்தப்பட்ட உதாரணங்களே. இது போல் பல்வேறு தளங்களில் பல்வேறு பிரச்சனைப்பாடுகள். இவ்வனைத்து கோட்பாடுகளிலும் பல முக்கியமான உண்மைகள் உள்ளன. கூடவே சில குறைகபாடுகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடாமிஸக் கொள்கை பகுத்தாராய்வதிற்கு பேருதவியாக இருந்தது. உயிரியல், மருத்துவம் போன்ற துறைகளுக்கு பகுத்தாய்வுமுறையே அடிப்படையாக இருந்தது. ஹோலிசம் தொகுத்தாய்வதற்கு உதவியாக இருந்தது. சமூகவியல், பொருளாதாரம் போன்றவற்றுக்கு இவையே அடிப்படை. அதே போல் இயற்பியல், உளவியல், கணிதம் போன்ற துறைகளுக்கு இவை இரண்டுமே முக்கியமாக இருந்தன. நம் வளர்ச்சியின் அனைத்து காலகட்டங்களிலும் இம்முறைகளே நமக்கு தூண்டுகோள்களாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இம்முறைகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் உண்மைநிலையை ஒற்றைப்படையாகவே பார்த்து வருகின்றன. முன்பு நாம் பார்த்தது போல் அடாமிஸம் என்பது ஒருவகை சுருக்குதல்(Reductionism). இதன் எதிர் திசையில் பயனிக்க முற்பட்ட ஹோலிஸமும், அடாமிஸம் சுருக்கியவற்றை எல்லாம் உயர்த்திப்பிடிக்க (Elevationism) நினைத்து அதுவும் சுருக்குதலிலேயே வந்து முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றால் எண்ணற்ற பயன்கள் இருந்தும் - உளப்பகுப்பாய்வில் இருந்து யூங்கின் INTP / Myers-Briggs Type indicator வரை, பொருளாதாரக் கோட்பாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் வரை - இக்கோட்பாடுகள் அனைத்தும் இதன் ஆதார நோக்குக்கு எதிராகவே இருந்து வந்தன. ”அனைத்தையும் உள்ளடக்கிய முழுமை” என்ற நோக்கைக் கொண்ட ஹோலிஸம்(Holism) பலவற்றை தொடர்ந்து உதாசீனப்படுத்தியே வருகிறது. இதற்கும் சில வரையறைகள், எல்லைகள் உண்டு. உதாரணமாக சிஸ்டம்ஸ் தியரியைக் கொண்டு நம்மால் அசோகமித்திரனை உள்வாங்க முடியாது. காம்ப்லெக்ஸிடி தியரியைக் கொண்டு ”ஆழி சூழ் உலகினுள்” நம்மால் பயனிக்க முடியாது. சைபர்நெடிக்ஸைக் கொண்டு இளையராஜாவின் இசையினுள் நுழைய முடியாது. அதே போல் அடாமிஸக் கோட்பாட்டைக் கொண்டு கூட்டுநனவிலியைப் புரிந்து கொள்ள முடியாது. Grand unified தியரியைக் கொண்டு Raskolnikovவின் பெருந்துயரத்தை உணர முடியாது. String தியரியைக் கொண்டு நதியில் முடிவில்லாமல் படரும் நிலவொளியின் அழகை விவரிக்க இயலாது. முழுமை, பிளவுபடா உண்மை என்று வரையறை செய்யும் இவைகள் யதார்த்தத்தின் ஒரு பக்கத்துடன் மட்டுமே உரையாடுகின்றன. ஒற்றை நிழலை மட்டுமே பிரதிபலிக்கின்றன. அந்நிழலையே உண்மையயென்றும் நம்புகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;யதார்தத்தின் நுண்ணிய அவதானிப்புகளை, என்னற்ற தளங்களை எல்லாம் பருப்பொருட்களாகவே(Matter) இவை சுருக்க முட்படுகின்றன. சிஸ்டம்ஸ் மற்றும் காம்ப்லெக்ஸிட்டி தியரியும் சரி, ஸ்டிரிங் தியரியும் சரி அனைத்தையும் பருப்பொருட்களைக் கொண்டே விவரிக்க முற்படுகின்றன. இதையே ”முழுமைநோக்கு” என்ற அர்த்தத்தில் இவை எடுத்துக் கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வித நோக்கைக் கொண்டு ஆராயப்படும் பிரபஞ்ச நோக்கை ‘ஒற்றைப் பரிமாணமுள்ள தட்டையான உலகம்' (One-Dimensional Flatland) என்று கென் வில்பர் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை நிலை மற்றும் யதார்த்தம் என்பது இந்த அளவு தட்டையான, ஒற்றைப்பரிமாணமுள்ள ஒன்று அல்ல. அது பல நிலைகளால், பல தளங்களால், அடுக்குகளால் ஆனது என்கிறார். யதார்தத்தின் பல தளங்களை அறிய ஒரு பொது வடிவத்தை பிளாடினஸில் இருந்து அரவிந்தர் வரை கொடுத்துள்ளனர். அதையே ஹஸ்டன் ஸ்மித், ஹக்ஸ்லி போன்றோர் மேலும் விரிவுபடுத்தினர்.  ‘இருப்பின் மாபெரும் சங்கிலி' (Great Chain of Being) என்று அதை கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SHHa4pRJYHI/AAAAAAAAARA/dlufPnOhTp8/s1600-h/greatnestofbeing.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SHHa4pRJYHI/AAAAAAAAARA/dlufPnOhTp8/s400/greatnestofbeing.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5220194109784416370" border="0" /&gt;&lt;/a&gt;பல்வேறு புராதன மதங்களுக்கிடையே(pre-modern religions) என்னற்ற வேறுபாடுகள் இருந்தாலும் பெரும்பாலானவை ‘இருப்பின் மாபெரும் சங்கிலி' என்பதை ஏற்றுக்கொள்கின்றன. ஒரு அடுக்கை(level) அரவணைத்து மற்றொரு அடுக்கு எழுவதால் இதை ‘இருப்பின் மாபெரும் சங்கிலி' என்று சொல்வதைவிட ‘இருப்பின் மாபெரும் கூடு' (Great Nest of Being) என்று சொல்வதே பொருத்தமானது. அரவணைத்து எழுதல் (Transcend &amp;amp; Include) என்பதே இவற்றின் ஆதார நோக்கு. அதாவது பருப்பொருளை(Matter)அரவணைத்து எழுவதே உயிர்(Life). உயிர் என்பது பருப்பொருட்களை உள்ளடக்கிய ஒன்று. ஆனால் பருப்பொருள்கள் மட்டுமே உயிர் அன்று. அதே போல் உயிரை உள்ளடக்கி எழுவது மனம்(Mind). ஆனால் உயிர் மட்டுமே மனம் அன்று. இவ்வாறு ஒன்றை உள்ளடக்கி மற்றொன்று எழுகிறது. பிளாடினஸ் இதை ‘a development that is envelopment' என்று ரத்தினச்சுருக்கமாக கூறுகிறார். வேதாந்தத்தில் இதையே அன்னமயகோஷா(the sheath or level made of physical food), பிராணமயகோஷா (the level made of élan vital), மனோமயகோஷா(the level made of mind), விஞ்ஞானமயகோஷா (the level made of higher mind or soul), ஆனந்தமயகோஷா(the level made of transcendental bliss or causal spirit) என்று கூறுப்படுகிறது. ஆனால் இவை அனைத்துமே தூய இருப்பின் பலவகைப்பட்ட தோற்றங்களே (Manifestations of the Spirt). தூய இருப்பு ஒரு காகிதம் போல். நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் மானிட்டர் ஸ்கிரீன் போல். அதில் இருக்கும் உள்ளடக்கமே பருப்பொருள், உயிர், மனம் மற்ற அனைத்தும். இத்தூய இருப்பையே வேதாந்தம் 'தூரியா', ‘தூரியதித்தா'(nondual, ever-present, unqualifiable Spirit-as-such) என்று கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டுரையின் முதலில் கேட்கக்பட்ட கேள்விக்கு (உண்மைநிலை என்பதின் அடிப்படை இயல்பு என்ன? பூரண-முழுமையா? அல்லது மூலாதார துகள்களா?) ‘இருப்பின் மாபெரும் கூடு' என்ற நோக்கை வைத்து பதில் அளிக்க முயற்சித்தால் அதன் விடை -  ‘&lt;span style="font-style: italic;"&gt;இரண்டுமே&lt;/span&gt;' அல்லது ‘&lt;span style="font-style: italic;"&gt;இரண்டுமே அல்ல&lt;/span&gt;' என்பதில் வந்து முடிவடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது உண்மை நிலையானது பூரண-முழுமையாகவும், மூலாதார துகள்களாகவும் ஒரே சமயத்தில் இருக்கும் &lt;span style="font-style: italic;"&gt;‘ஹோலான்களால்'(Holons) &lt;/span&gt;ஆனது. ஹோலான் என்ற வார்த்தையை ஆர்துர் கீஸ்லர் முதன்முதலில் தனது ‘The Ghost and the Machine' என்ற புத்தகத்தில் அறிமுகப்படுத்தினார். ஹோலான் என்பதின் அர்த்தம் ”முழுமை/பகுதி” (whole/part) ஆகும். ஒரே சமயம் ஒன்றை உள்ளடக்கியும் மற்றொன்றின் பகுதியாகவும் அது இருக்கும். உதாரணமாக ‘அணுத்திரளை'(Molecule) என்பது ஒரு 'அணுவை' உள்ளடக்கியது. அதே சமயம் 'அணுத்திரளை' 'செல்லின்' (Cell) ஒரு பகுதியும் கூட. ‘வார்த்தை' ‘எழுத்துக்களால்' ஆனது. 'வார்த்தை' ‘வாக்கியத்தினுள்' உள்ள ஒரு பாகமே 'வாக்கியம்' 'வார்த்தகளால்' கட்டமைக்கப்பட்டுள்ளது. 'பத்தியின்' பாகமே 'வாக்கியம்'. இப்படி ஒரே சமயம் ஒன்றின் பகுதியாகவும் ஒன்றை உள்ளடக்கியும் இருப்பதே ஹோலான் ஆகும்.  ‘அடாமிஸமா? அல்லது ஹோலிஸமா?', ‘முழுமையா? அல்லது பகுதியா?' போன்ற இரண்டாயிரம் ஆண்டு பிரச்சைனைக்கு ஒரு வழியாக தீர்வு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹோலான்கள் புரிதலின் வசதிக்காக நிறுவப்பட்ட ஒரு கருத்துவடிவமே. “இதுதான்” பிளவுபடா மூலாதாரக் கூறு என்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டவை எல்லாம் இன்று மறுக்கப்பட்டு வருவதைக் கண்டு அவ்வகை நோக்கிற்கு எதிர்வினையாக உருவாக்கப்பட்ட கருத்துருவமே ஹோலான்கள் ஆகும். ப்ரோட்டான், நியூட்ரான் போல் இதை ஒரு திட்டவட்ட புறவய வடிவமாக கருதக் கூடாது. இந்த புரிதல் அவசியம். ஒரே சமயம் ஒன்றை உள்ளடக்கியும் மற்றொன்றின் பகுதியாகவும் இருப்பதே அது. ப்ரோடான்களும், நியுட்ரான்களும் கூட ஹோலான்களே. குவார்க், லெப்டான், ஃபெர்மியான், போஸான், ஹாட்ரான், அணுக்கரு, அணு, அணுத்திரளை, தனிமம், சேர்மம் என்று கேலக்ஸி, கிளஸ்டர்ஸ், சூப்பர்கிளஸ்டர்ஸ் வரை முடிவேயில்லாமல் போய்க்கொண்டே இருப்பது இது.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு தளங்களில், பல்வேறு துறைகளிலும் ஹோலான்களைக் காணலாம்.  உயிரியல், கணிதம், இயற்பியல், மொழியியலில் இருந்து பொருளாதாரம், சமூகவியல், தகவல் தொழில்நுட்பம் வரை. Bits, Bytes, variables, functions/classes, programs, packages, portlets/widgets, mash-ups, Dashboard, Portals, Meta Portals என்று இதை நிரல்மொழி போன்ற தளங்களிலும் இதைக் காணலாம். ‘Turtles all the way up, all the way down' என்பது போல். (ஹோலான்கலில் இருந்து ஹீப்ஸ் மற்றும் ஆர்டிஃபேக்ட்ஸ்களுக்கு சில நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. இது ஒரு அறிமுகப் பதிவு என்பதால் ஹீப்ஸ் மற்றும் ஆர்டிஃபேக்ட்ஸ் குறித்து இங்கு பேச முற்படவில்லை. விருப்பமுள்ளவர்கள் &lt;a href="http://www.integralworld.net/kofman.html"&gt;இந்தப் பதிவுக்குச்&lt;/a&gt;  சென்று இவற்றைப் பற்றி படிக்கலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகை ஹோலான்களால் உருவாகும் தொடர் அடுக்குகளை ஹோலார்க்கி(Holarchy) என்று ஆர்துர் கீஸ்லர் கூறினார். இயல்பாக இயற்கையில் தென்படும் அடுக்குகளே(Natural Hierarchies) இவை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அடுக்குகள்(Hierarchies) என்ற வார்த்தை எதிர்மறையான அர்த்தத்திலேயே உள்வாங்கப்படுகிறது. பலவித குரூர ஒடுக்குமுறைகளுக்குக் காரணம் இவ்வித அடுக்குகளே என்று நம்பப்படுகிறது. அவை உண்மையே. ஆனால் இவ்வகை அடுக்குகள் அடுக்கதிகாரங்கள்(Dominator Hierarchies) ஆகும். இதன் மறுபுரம் இயற்கையாக, ஹோலான்களை உள்ளடக்கி காணப்படும் அடுக்குகள் வளர்ச்சி அடுக்குகள் (Growth Hierarchies) ஆகும். இதுவே ஹோலார்க்கியும் ஆகும். ஒன்றை அரவணைத்து எழுவதே(Transcend and include) இதன் அடிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம் வளர்ச்சி அடுக்குகள் அடுக்கதிகாரங்களாக மாற வாய்ப்புகளும் உள்ளன. பின்நவீனத்துவம் முன்வைக்கும் எதிர்-அடுக்கு(Anti-hierarchy) போன்ற கொள்கைகள்களும் கூட அடுக்கதிகாரங்களாக ஆகும் வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. இதைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;வற்றாத தத்துவத்தின்(Perennial Philosophy) சாரமாக விளங்கும் ‘இருப்பின் மாபெரும் கூடு' பற்றி கென் வில்பர் ஆழமாக படித்து வந்தார். அதன் எளிமையில் உள்ள அழகு அவரை மிகவும் கவர்ந்தது. ஆனால் அதே சமயம் அதில் உள்ள சிறு சிறு பிழைகள் அவரை உறுத்தின. அவற்றைப் பிழைகள் என்று சொல்வதை விட பொருள் விளக்கத்தில்(Interpretation) ஏற்பட்ட தவறுகள் என்று சொல்வதே சரி. ஆன்மீக அனுபவத்தை மீபொருண்மைவாத(Metaphysics) நோக்கில் விளக்கம் அளிக்க முற்படும் போது இவ்வகை தவறுகள் ஏற்படவே செய்கின்றன. வில்பர் இவ்வகை விளக்கங்களில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டினார். இதில் நாம் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது 'அனுபவத்தை' அவர் கேள்விக்குட்படுத்தவில்லை. அனுபத்தைப் பற்றிய 'விளக்கங்களையே' கேள்விக்குட்படுத்தினார். இவ்வகை தவறான விளக்கங்களை பின்நவீனத்துவம் தன் கையில் எடுத்துக் கொண்டு, ”மக்களை ஒடுக்கி, அடிமைப்படுத்துவதற்கான அடுக்கதிகாரங்களே 'வற்றாத தத்துவம்' என்ற முகமூடி அணிந்து வந்தது” என்பது போன்ற தீவிர முடிவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகை முடிவுகளும் தவறானவையே என்பது வில்பரின வாதம்.  இக்கருத்து வேற்றுமைகளைக் களைவதற்கு இருதரப்பு கருத்துகளையும்(Thesis/Antithesis) நுட்பமாக பரிசீலித்து உற்றுநோக்கி தொகுக்க(Synthesis) முற்படவேண்டும் என்பதே வில்பரின் கனவு. அதையே முழுமைநோக்கு(Integral Approach) என்று கூறுகிறார். ஒன்றை ஒடுக்கி மற்றொன்றை மீட்க முயலும் முறை அல்ல இது. அனைத்தையும் அரவணைத்து எழும் முறையே (Transcend and Include) இது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக  ‘இருப்பின் மாபெரும் கூடு' பருப்பொருளை கூட்டின் முதல் அடுக்காக(Level1), உள்விரிவுகளே இல்லாத ஒன்றாக பார்க்கிறது. இவ்வகை மீபொருண்மைவாத விளக்கத்தைக் கொஞ்சம் நீடித்து யோசித்தால் மனித மூளை(Matter/Level1) போன்ற ஒரு அமைப்பைவிட ஒரு புழுவின் உணர்ச்சிகள்(Life/Level2) சிக்கலானவை என்பது போன்ற அர்த்தத்தில் அது முடியும். நவீன அறிவியலின்படி இவ்வகை நோக்குகள் தவறானவை. மனித மூளை மிக சிக்கலான ஒரு அமைப்பைக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் பருப்பொருள் என்பது உள்விரிவே இல்லாத ஒன்று அல்ல. மாறாக பருப்பொருட்கள் நாம் உள்ளார்ந்து உணரும் ஒன்றின் வெளிவடிவங்களே (exterior dimensions). உதாரணமாக 'consciousness' என்பது உள்வடிவம்(interior dimension). 'Neurophysiology' அதன் வெளிவடிவம்(exterior dimension). ஒரு EEG கருவியை நீண்ட நாட்களாக தியானப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு புத்த பிக்குவின் மேல் பொறுத்தினால் 'Delta' அலைகளில் வித்தியாசம் தெரியும். புத்த பிக்கு தியான நிலையில் உணரும் அனுபவம் அகவயமான ஒன்று(interior dimension). ஆனால் அதற்கேற்ப டெல்டா அலைகளில், டொபோமின் அளவுகளில் ஏற்படும் மாறுதல்கள், தொடர்புறுகள்(correlations) புறவயமானது. ஒன்றை மற்றொன்றாக சுருக்க முயல்வதே கருத்தியல் தளங்களில் நிலவி வரும் பல பிரச்சனைகளுக்குக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் மேலுள்ள படத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் ‘இருப்பின் மாபெரும் கூடு' என்பதை கீழுள்ள வரைபடத்தில் உள்ளது போல் வில்பர் சிறிது மாற்றியமைத்தார்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SHHa4xgVshI/AAAAAAAAARI/3u5-pXWLnvk/s1600-h/matter.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SHHa4xgVshI/AAAAAAAAARI/3u5-pXWLnvk/s400/matter.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5220194111995621906" border="0" /&gt;&lt;/a&gt;அக்காலத்தில் வெளிவடிவங்களை உணர்ந்து, விவரிக்க வசதிகள் இல்லை. தியானம், யோகம் போன்ற introspective phenomenology முறைகளை மட்டும் கொண்டு டோப்போமைனிலும், டெல்டா அலைகளிலும் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து, விளக்குவது கடினம். அப்படி விளக்க முற்படும் போது இவ்வகை தவறுகள் நிகழ்கின்றன. 'இருப்பின் மாபெரும் கூடு' போன்றவற்றின் போதாமைகளும் இவையே. இவற்றைக் கடந்து வெளிவடிவங்களைக் கண்டடைவதற்கு நவீன அறிவியலே நமக்கு உதவுகிறது. இன்று சங்கரர் இருந்திருந்தால் 'நாடிகளுக்கும்'(Nadis), நியுரோடிரான்ஸ்மீட்டகளுக்கும் உள்ள உறவைப் பற்றி எழுதியிருப்பார் என்றும் வில்பர் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக உள்வடிவம், வெளிவடிவம் போன்றவை உண்மைநிலையின், தூயஇருப்பின் பல்வேறு அவதானிப்புகள் என்று கூறுகிறார். உள்வடிவம், வெளிவடிவம் என்பதை மேலும் விரிவுபடுத்தி ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய நான்கு காற்பகுதிகளைக்(Quadrants) கொண்டு விளக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SHHc-BJA8EI/AAAAAAAAARo/mQRyIPd5QzM/s1600-h/aqal_small2.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SHHc-BJA8EI/AAAAAAAAARo/mQRyIPd5QzM/s320/aqal_small2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5220196401115361346" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SHHhFD1G1VI/AAAAAAAAAR4/zQVcfmCfAWc/s1600-h/four-quadrants-levels.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SHHhFD1G1VI/AAAAAAAAAR4/zQVcfmCfAWc/s400/four-quadrants-levels.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5220200920142763346" border="0" /&gt;&lt;/a&gt;மேலுள்ள வரைபடங்களே முழுமைநோக்கின் முதுகெலும்பு போல். இதன் இடதுபுரம் உள்ளவை அனைத்தும் உள்வடிவங்கள்(Interior dimensions). வலதுபுரம் உள்ளவை அனைத்தும் வெளிவடிவங்கள்(Exterior dimensions).&lt;br /&gt;அதே போல் மேற்புரம் உள்ளவை தனிநபர் சார்ந்தவை (Individual). கீழ்புறம் உள்ளவை குழு சார்ந்தவை (Collective). இவ்வாறு உள்வடிவம், வெளிவடிவம், தனிநபர், குழு போன்ற நான்கு பார்வைகளையும்(Perspectives) உள்ளடக்கி ஒவ்வொரு காற்பகுதிகயையும் கீழே கூறப்பட்டுள்ளது போல் வறையறை செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;மேல்-இடது காற்பகுதி(Upper Left)    ---&gt;  Subjective(அகவயம்) / Interior-Intentional&lt;/li&gt;&lt;li&gt;மேல்-வலது காற்பகுதி(Upper Right) ---&gt;  Objective(புறவயம்)/ Interior-Behavioural&lt;/li&gt;&lt;li&gt;கீழ்-இடது காற்பகுதி (Lower Left)    ----&gt;  Inter-subjective / Collective-Cultural&lt;/li&gt;&lt;li&gt;கீழ்-வலது காற்பகுதி(Lower Right)  ---&gt;  Inter-objective. / Collective-Social&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நான்கு காற்பகுதிகளும் நான்கு வித பார்வைகளை(Perspectives) முன்வைக்கின்றன. Subjective, Inter-subjective, Objective, Inter-objective என்பதை கொஞ்சம் எளிமைப் படுத்தி  நான்(I), நாம்(We), அது(IT), அவை(ITS) என்று தொகுக்கலாம். இதையே இன்னும் எளிமைப்படுத்தி எழுவாய்(I), முன்னிலை(We) மற்றும் படர்க்கை(IT) என்றும் கூறலாம். இவை ஒவ்வொன்றும் ஒருவித கோணங்கள், பார்வைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுருங்கச் சொன்னால் இவை First-person perspective, Second-person perspective மற்றும் Third-person perspective.&lt;br /&gt;&lt;br /&gt;நான், நாம், அது (I, We, IT) என்பதை ‘The Big Three' என்கிறார் வில்பர். புத்தம், சங்கம், தர்மம் போல்.”, "கலைகள்,அறம்,அறிவியல்” (Art,Science,Morals) போல்.  ”The Good, the True and the Beautiful" போல். ”சத்யம், சிவம், சுந்தரம்' போல்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்(I), நாம்(We), அது(IT), அவை(ITS) என்ற பார்வைகள் ‘உண்மை' என்பதை பல்வேறு கோணங்களில், தளங்களில் விவரிக்கின்றன. 'நான்' என்ற பார்வை வலியுறுத்தும் உண்மை ‘Truthfulness' ஆகும். அதாவது தனக்குத்தானே உண்மையாக இருத்தல். அகவயமாக நம் நேர்மையை, சமரசமில்லாத நோக்கை உணர்தல். போதிசத்வனைப் போல் நமக்குள் உள்ள புத்தனை அறிதல்.&lt;br /&gt;&lt;br /&gt;'நாம்' என்ற பார்வை வலியுறுத்துவம் உண்மை ‘Justness'. அன்பு, கனிவு, அறவுணர்வு போன்றவற்றை.&lt;br /&gt;&lt;br /&gt;‘அது' என்ற பார்வை வலியுறுத்துவம் உண்மை ‘Truth'. அதாவது ஆராய்ந்த்து அறியும் புறவய உண்மையை.&lt;br /&gt;&lt;br /&gt;‘அவை' என்ற பார்வை வலியிறுத்தும் உண்மை 'Functional Fit'. பௌதத்தில் கூறப்படும் ‘சங்கம்' போல்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு உண்மை என்பது ஒற்றைப்படையானது அல்ல. இந்த நான்கு பார்வைகள் பலவித நுண்ணிய வேறுபாடுகளை உடைய உண்மைகளை நமக்கு அளிக்கின்றன. இவ்வணைத்தையும் உள்ளடக்கிய ஒன்றே பேருண்மை. அதே போல் இவ்வுண்மைகள் அனைத்தும் பேருண்மையின் வெவ்வேறு வடிவங்களே என்றும் கூறுகிறார். இவ்வாறு அனைத்து தளங்களையும், அனைத்து நிலைகளையும் உள்ளடக்கிய இவ்வரைபடத்திற்கு AQAL(All Quadrants All Levels) என்று பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;கீழுள்ள வரைபடம் பல்வேறு அறிவுத்துறைகளை AQAL வடிவத்திற்குள் பொருத்த முயல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SHHa4_GvDEI/AAAAAAAAARQ/bsPWaC7vGhY/s1600-h/four_quadrants_and_thinkers.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SHHa4_GvDEI/AAAAAAAAARQ/bsPWaC7vGhY/s400/four_quadrants_and_thinkers.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5220194115646327874" border="0" /&gt;&lt;/a&gt;அதாவது ஃப்ராய்ட்(Depth psychology), ஸ்கின்னர்(Behaviourism), கடாமர்(Hermeneutics), பார்ஸன்ஸ்(Structural Functionalism) போன்றவர்கள் வேறுவேறு தளங்களில் நின்றே உண்மைநிலை குறித்து பேசுகின்றனர் என்று முழுமைநோக்கு கூறுகிறது. ஃப்ராய்ட் பேசுவது  &lt;span style="font-style: italic;"&gt;தனிமனித (Individual)/Subjective(அகவயம்)/Interior-Intentional &lt;/span&gt;தளத்தில். ஸ்கின்னர் பேசுவது&lt;span style="font-style: italic;"&gt; தனிமனித(Individual)/Objective(புறவயம்),/Interior-Behavioural &lt;/span&gt;நோக்கில்.&lt;br /&gt;கடாமர் &lt;span style="font-style: italic;"&gt;குழு சார்ந்த(Collective)/Inter-subjective/Collective-Cultural &lt;/span&gt;தளத்தில். பார்ஸன்ஸ் &lt;span style="font-style: italic;"&gt;குழு சார்ந்த(Collective)/Inter-objective/Collective-Social&lt;/span&gt; தளத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தந்த தளங்களில் ஆழமான கருத்துகளை, உண்மைகளை இவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் இவற்றில் பல தன் கருத்தை மட்டுமே உயர்த்திப் பிடிக்க முயன்று மற்ற கருத்துத் தளங்களை ஒடுக்குகிறது. ஆனால் முழுமைநோக்கு எந்தத் தரப்பையும் சுருக்கியோ, உயர்த்திப்பிடித்தோ பேசாமல் அனைத்து தரப்பின் உண்மைகளையும் தொகுத்து உள்வாங்கிக் கொண்டு பேசு முயற்சி செய்கிறது. முன்பு கூறப்பட்டது போல் ஒரு தரப்பை மட்டும் சுருக்கியோ, உயர்த்திப்பிடித்தோ முன்வைக்கப்படும் பிரபஞ்ச நோக்கு ‘ஒற்றைப் பரிமாணமுள்ள தட்டையான உலகம்' (One-Dimensional Flatland) ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன அறிவியல் பொருள்முதல்வாத(Scientific Materialism) நோக்கு இடதுபுரம் உள்ள அகவய உள்வடிவங்களை(Interior Dimension) புறவய வெளி வடிவங்களைக் கொண்டு(Exterior Dimension) விளக்க முற்பட்டு அகவய உள்வடிவங்களை எல்லாம் சுருக்குகிறது. புறவய வெளிவடிவ நோக்கு ‘பிரபஞ்சம்' என்று கூறும் போது அது பருப்பொருட்களால் ஆன பிரபஞ்சத்தையே(Cosmos) குறிக்கிறது. அதனால் அது ஆழமே இல்லாத, உள்வடிவங்களே இல்லாத தட்டையான பிரபஞ்சமாக இருக்கிறது. இவ்வகை ஆழமில்லா பிரபஞ்ச(Cosmos) நோக்குக்கு பதில் பிதாகரஸ் அறிமுகப்படுத்திய பிரபஞ்ச நோக்கான "Kosmos" என்பதை வில்பர் முன்வைக்கிறார். பருப்பொருள்(Physiosphere), உயிர்(Biosphere), மனம்(Noosphere) என்ற அனைத்தையும் உள்ளடக்கியதே இவ்வகை பிரபஞ்ச(Kosmos) நோக்கு. உள்வடிவங்களையும் வெளிவடிவங்களையும், அகவய நோக்கையும் புறவய நோக்கையும் உள்ளடக்கியது. தூய இருப்பின், சூனியவெளியின்(Emptiness) பிராகாசமான வெவ்வேறு தோற்றங்களே இவை(Radiant Manifestations of Spirit/Emptiness) என்கிறார் வில்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;இன்று கருத்தியல் ரீதியாக காணப்படும் பலவகைப்பட்ட மோதல்களுக்கு ஆழமில்லாத பிரபஞ்ச நோக்கே(Flatland) காரணம். இதையே ‘Collapse of the Kosmos' என்று வில்பர் கூறுகிறார். பல உதாரணங்கள் இதற்கு. போன வருடம் வெளிவந்த அபுனைவு புத்தகங்களில் ‘Stumbling on Happiness' என்ற புத்தகம் அதிக அளவு கவனம் பெற்றது. ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உளவியல் பேராசிரியரால் எழுதப்பட்ட புத்தகம். மகிழ்ச்சி, சந்தோஷம் என்பதை Behaviourism, Cognitive Science மற்றும் Economicsஐ கொண்டு விளக்க முற்பட்டது. AQAL வரைபடத்தோடு இவ்வித ஆராய்ச்சி முறையை ஒப்பிட்டால் Behaviourism, Cognitive Science மற்றும் Economics போன்றவை வலதுபுர புறவய வெளிவடிவ நோக்கையே ஆதாரமாக கொண்டுள்ளது என்பது புரியவரும். இவ்வகை ஆராய்ச்சிகள் சில முக்கிய உண்மைகளை முன்வைத்தாலும் அதன் முடிவான நோக்கு ஆழமில்லா நோக்காகவே இருக்கிறது(Flatland).&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் இனிமேல் ஆராய்ச்சிகளை எல்லாம் பலதுறை வல்லுனர்களே(Polymath) செய்ய வேண்டும் என்று முழுமைநோக்கு கூறவில்லை. ஒருதுறை நிபுணத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளாக இருப்பினும் அனைத்து நோக்குகளையும் கருத்தில் கொண்டு நாம் ஆராய்ச்சியில் இறங்கினால் இவ்வகை சுருக்குதல்களையும், கருத்தியல் மோதல்களையும், மனக் காழ்புகளையும் தவிர்க்கலாம் என்கிறது முழுமைநோக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் இந்த நான்கு நோக்குகளுக்கும்மிடையே தொடர்புறல்கள்(Correlations) உள்ளன. ஒரு தளத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்ற தளங்களையும் பாதிக்கும். உதாரணமாக அன்னியப்படுத்தும் உற்பத்தி முறைகளைக்(alienating mode of production) கொண்ட சமூகத்தில் ஒரு தனிமனிதனின் தன்மதிப்பு பாதிப்புக்கு உள்ளாகும். சமூக உறவுகளிலும், குடுப்ப அமைப்புகளிலும் பாதிப்பு ஏற்படும். உடலியல் கூறுகளிலும் மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. கலாச்சாரச் சிதைவுகளும் இருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞ்ச நோக்கைப்(Kosmos) பற்றி மேலும் விளக்க இருபது கோட்பாடுகளை(20 tenets) வில்பர் வகுத்துரைத்தார். பிரபஞ்சம் ஹோலான்களால் ஆனது என்பது முதற் கோட்பாடு. அனைத்து ஹோலான்களுக்கு பொதுவான சில பண்புகள் உள்ளன. அவை 1)தன்னைக் காத்தல்(Self-Preservation, Agency), 2)மற்றொன்டோடு இணைதல்(Self-adaptation, Communion), 3)தன்னை மீறி எழுதல்(Self-Transcendence) மற்றும் 4)தன்னை அழித்தல்(Self-Dissolution). இது இரண்டாம் கோட்பாடு. அதாவது எந்த ஒரு ஹோலானும் ஒரே சமயம் ஒன்றின் பகுதியாக உள்ளடங்கியும், மற்றொன்றை உள்ளடக்கியும் இருப்பதால் அது தன்னுடைய சுயத்தையும் காத்துக் கொண்டு(Agency) தன்னை உள்ளடக்கி உள்ள முழுமைக்கும் எவ்வித பாதிப்பு வராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்(Communion). இவற்றில் ஏதாவது ஒரு பாதிப்பு வந்தால் ஹோலான் தன்னை அழித்து உப-ஹோலான்களாக உருமாறும். ஒரு செல் அழிந்தால் அது அணுத்திரளையாக(Molecule) உருமாறும். ஒரு அணுத்திரளை அழிந்தால் அது அணுவாக உருமாரும். இப்படியே இது போய்க்கொண்டிருக்கும். அதே போல் ஒரு ஹோலான் அழிந்தால் அதன் மேல் கட்டமைக்கப்பட்ட நிலைகள் அனைத்தும் அழிந்து போகும். ஆனால் அது உள்ளடக்கிய மற்ற கீழ்நிலைகள் அழியாமல் இருக்கும். அணுத்திரள்கள் அனைத்தும் அழிந்தால் அதன் மீது கட்டமைக்கப்பட்டுள்ள செல்கள், டிஸ்யூக்கள், உயிர்ப்பொருட்கள் போன்றவை அழியும். ஆனால் அணுக்கள் அழியாமல் இருக்கும். பயோஸ்பியர்(Biosphere) அழிந்தால் அதன் மேல் கட்டமைக்கப்பட்டுள்ள நுவோஸ்பியர்(Noosphere) அழியும். ஆனால் பிஸியோஸ்பியர்(Physiosphere) அழியாமல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை அழித்தலைப் போல் தன்னை மீறி எழுதல் (Self-Transcendence) என்பதும் ஹோலான்களின் அடிப்படை பண்புகளில் ஒன்று. பரிமாண வளர்சிக்கு அதுவே தூண்டுகோள். தன்னைக் காத்தல்(Self-Preservation, Agency), மற்றொன்டோடு இணைதல்(Self-adaptation, Communion) போன்றவற்றை "Vertical Drives" என்றும் தன்னை மீறி எழுதல்(Self-Transcendence) தன்னை அழித்தல்(Self-Dissolution) போன்றவற்றை "Horizontal Drives" என்றும் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் அடிப்படை(fundamental) மட்டும் குறிபிடத்தக்க(significant) போன்ற கோட்பாடுகளும் ஹோலான்களுக்கு உண்டு. தண்ணீரோடு ஒப்பிடும் போது ஹைட்ரஜன் அணு ”அடிப்படையானது”. ஆனால் தண்ணீர் ஹைட்ரஜன் அணுவை விட ”குறிப்பிடத்தக்கது”.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல் இருபது கோட்பாடுகள். விருப்பமுள்ளவர்கள் இவற்றை முழுவதுமாக &lt;a href="http://integralwiki.net/index.php?title=Holon"&gt;இங்கு &lt;/a&gt;படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு Atomism/Wholism--&gt; Holism--&gt; Integral என்று முழுமைநோக்கு  விரிவடைந்து   வந்துள்ளது. (இனிமேல் கட்டுரையில் 'முழுமைநோக்கு' என்னும் சொல் ‘Integral View' என்னும் அர்த்தத்திலேயே குறிப்பிடப்படும்). இது போன்ற முழுமைநோக்குக்கு இதற்கு முன் பலர் முயன்றுள்ளனர். பிளாடினஸில் இருந்து அரவிந்தர் வரை, மாஸ்லோவ்வில்(Maslow) இருந்து கெப்ஸ்ர்(Gebser) வரை Whiteheadஇல் இருந்து ஹாபர்மாஸ்(Habermas) வரை பலர் முயன்றுள்ளனர். ஹாபர்மாஸ் இன்றும் இவ்வகை நோக்கிற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். வில்பரும் இவர்களின் தொடர்ச்சியாகவே தன்னைப் பார்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவ்வகை ஆய்வுகளின் மேல் ஒருவித அவநம்பிகையே நமக்கு இன்று இருந்து வருகிறது. மௌனத்தை பகுத்தாய்ந்தும், தொகுத்தாய்ந்தும் அறிய விழைவது போல் உள்ளது இவ்வகை ஆய்வுகள். இது போன்ற முழுமைநோக்குகள் பல இதற்கு முன் தோல்விகளாய் முடிவடைந்ததே இவ்வித அவநம்பிக்கைக்குக் காரணம். மேலும் போலி அறிவியல்(Pseudo Science) மற்றும் நவயுக ஆன்மீகம்(New-Age Spirituality) போன்றவைகளும் அவநம்பிக்கைக்குப் பெரும் காரணங்கள். ஆனால் அறிதல் என்று வந்து விட்டாலே இவ்வகை பகுப்பாய்தல்கள், தொகுத்தாய்தல்கள் தடுக்க முடியாதவைகளாகின்றன. அதே போல், இவ்வகை பகுப்பாய்வில் ஈடுபடும் ஒருவர் இதில் சிக்குண்டு வெளிவர முடியாமல் தவித்தால், அதற்கு அவரது தன்முனைப்பு பகுப்பாயப்பட்டவட்டில் கொள்ளும் ஒருவித சுருங்கிய ஈடுப்பாடே காரணமே தவிர அதற்கு 'பகுப்பாய்வு' என்ற ஒரு ஆராய்ச்சி முறை காரணம் கிடையாது. இவைகளின் மீதி ஏறி தான் இவைகளை கடந்து செல்ல முடியும். இது ஒருவகை முரணியக்கம் போல்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக ”இயற்கை  தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் வல்லமை உடையது. அதனால் நீ 'எதுவும் செய்யாமல் இரு' ” என்று 'One Straw Revolution' என்ற புத்தகத்தில் மசன்பு ஃபுகாகா கூறினார். ஆனால் ஃபுகாகாவே&lt;br /&gt;எண்ணற்ற கருத்தரங்கங்களுக்குச் சென்று 'இயற்கை விவசாயத்தை' வலியிறுத்திப் பேசினார். இயற்கை தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் வல்லமை உடையது தானே? பிறகு எதற்கு வேலைமெனக்கட்டு அவர் கருத்தரங்குகளில் பேச வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஃபுகாகாவின் அச்செய்கை முரண்பாடு போல இருந்தாலும் அவை முரண்பாடே அல்ல. அடுத்தகட்ட நகர்வுக்கு நம்மை, நமது சமூகத்தை நகர்த்துவதற்காக நம்முள் உள்ளுர இருக்கும் ஒரு உந்துசக்தியே இத்தகைய செய்கைக்குக் மூலக்காரணம். இந்த விசையே அவரை மாநாடுகளுக்கும், கருத்தரங்களுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தத் தூண்டியது. அதுவே ‘இயற்கை விவசாயம்' போன்ற முறையையும் ஏற்படுத்த காரணமாக இருந்தது. ஆக ஆன்மீக ஈடுபாடு உடையவர்களுக்கு சங்கல்பம் எதுவும் இருக்கக் கூடாது போன்ற நவயுக நம்பிக்கைகளை வில்பர் கடுமையாக மறுக்கிறார். இந்த உந்து சக்தியையே வில்பர் 'Eros' என்று கூறுகிறார்(ஃப்ராய்ட் கூறிய அர்த்தத்தில் அல்ல). இவ்வகை உந்து சக்திகளில் நோய்கூறுகளும் ஏற்படலாம். ஹிட்லருக்கு ஏற்பட்டது போல். இந்த உந்து சக்தியே ஒரு தனிமனிதனை, ஒரு சமூகத்தை கீழே பிடித்தும் இழுக்கலாம். இது 'Phobos' (இதுவும் ஃப்ராய்ட் கூறிய அர்த்தத்தில் அல்ல).&lt;br /&gt;&lt;br /&gt;இவை இரண்டின் முரணியக்கமே வளர்ச்சிக்கான எரிபொருள். (Dialectics of Progress). பகுப்பாய்வு/தொகுப்பாய்வு போன்றவை இவ்வகை உந்து சக்திகளின் விளைவுகளே. சில சமயம் விளைவுகள் நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம். சில சமயம் அவை நம்மை பிடித்து குழிக்குள் தள்ளவும் தள்ளலாம். எரோஸும், ஃபோபோஸும் பேருண்மையின் பகுதிகளே. பகுப்பாய்வுகளும், தொகுப்பாய்வுகளும் கூட. அவைகயும் அறிதலின் ஒரு அங்கமே.&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் இவ்வகை முழுமைநோக்கு குறைகளேயற்ற ஒன்றாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. வில்பரின் இன்றைய  நோக்குகள் கூட பல்வேறு தவறுகளை, பரிமாண வளர்ச்சிகளைத் தாண்டித் தான் வந்திருக்கின்றன. பிறகு எதற்கு முழுமை நோக்கிற்கான கனவு? இதை வில்பர் இவ்வாறு விளக்குகிறார் -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 153, 153);font-family:georgia;font-size:100%;"  &gt;&lt;blockquote&gt;“All such attemps (for an integral, holistic view), of course, are marked by the many ways in which they fail, The many ways in which they fall short, make unwarranted-generalizations, drive specialists insane, and generally fail to achieve their stated aim of holistic embrace. It's not just that the task is beyond any one human mind; it's that the task itself is inherently undoable: knowledge expands faster than the ways to categorize it. The holistic quest is an ever-receding dream, a horiozon that constantly retreats as we approach it, a pot of gold at the end of the rainbow that we will never reach&lt;br /&gt;&lt;br /&gt;So why even attempt the impossible? Because, I believe, a little bit of wholeness is better than none at all, and an integral vision offers considerably more wholeness than the slice-and-dice alternatives. We can be more whole, or less whole; more fragmented, or less fragmented; more alienated, or less alienated - and an integral vision invites us to be a little more whole, a little less fragmented, in our work, our lives and our destiny"&lt;/blockquote&gt;&lt;/span&gt;தனது கோட்பாடுகள் அனைத்தும் வரைபடங்களைப் போலவையே என்றும் வரைபடங்களையே நிலப்பகுதிகளாகக் குழப்பிக் கொள்ளக்கூடாது (Confusing Maps with Territories) என்றும் கூறுகிறார். இங்கிருந்து அந்தமான் தீவுக்குச் செல்ல வேண்டும் என்றால் அந்தமானின் வரைபடத்தை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தால் போதாது. சமுத்திரத்தினுள் குதிக்காமல் எங்கும் செல்ல முடியாது. இவ்வாறு முழுமைநோக்கு பற்றி அறிவுத்தளத்தில் மட்டும் வாதாடிக் கொண்டு நேரடிக் பயிற்சியில் இறங்காமல் இருப்பவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். ராபின் கார்ன்மேன் என்ற விஸ்கான்ஸின் பல்கலைக்கழகப் பேராசிரியர் எடுத்த பேட்டி ஒன்றில் வில்பர் இவ்வாறு கூறிகிறார் -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 153, 153);font-family:georgia;" &gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="color: rgb(153, 153, 153);font-family:georgia;" &gt;"&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;Robin Kornman: &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;And what effect do you hope to have? What can knowing your philosophy do for the advancement of consciousness?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;Ken Wilber: &lt;/span&gt;Not very much, frankly. Each of us still has to find a genuine contemplative practice-maybe yoga, maybe Zen, maybe Shambhala Training, maybe contemplative prayer, or any number or authentic transformative practices. That is what advances consciousness, not my linguistic chitchat and book junk. But if you want to know how your particular practices fit with the other approachs to truth that are out there, then these books will help you get started. They offer one map of how things fit together, that's all. But none of this will substitute for practice..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;Kornman:&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;Your own world view is complicated enough. Meditators might just say, "Why do I need to have a global-historical view at all? Leave me alone to just meditate." What would you say to them?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;Wilber: &lt;/span&gt;Just meditate.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;Kornman: &lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;But you have some other scenarios as to why things can "go bad" in meditation.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;Wilber:&lt;/span&gt; Yes, the idea is that, as we were saying, development consists of several different streams that develop through the basic stages or waves of consciousness unfolding. The great wisdom traditions tend to emphasize two or three of these streams, such as the cognitive (awareness), the spiritual (and moral), the higher affect (love and compassion). But they tend to neglect other streams, such as emotional, interpersonal, relationships, and conventional interactions.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;Thus, as you tend to make progress in some of these streams-perhaps the meditative/cognitive-you can become a little "unbalanced" in your overall development. Other developmental lines become neglected, withered, atrophied. Your psyche is saddled with one giant and a dozen pygmies. And the more your meditation practice advances, the worse the imbalance becomes. You start to get very weird, and you are told to increase your meditative effort, and pretty soon you come apart at the seams like a cheap suit. Yes?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;So one of the things that we might want to look at are ways to bring a more integral practice to bear on our lives, an integral practice that includes the best of ancient wisdom and modern knowledge, and blends the contemplative with the conventional. I don't have the answers here, but these books are, I hope, a way to begin this dialogue in good faith and good will.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;Kornman:&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;When you earlier said that meditators could "just meditate," was that being just a little glib? Because it doesn't seem that you really think that meditation alone is enough.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;Wilber:&lt;/span&gt; Well, you didn't ask if I thought meditation alone is enough. You asked what I would tell somebody who said, "Leave me alone to just meditate." I'd say, "Just meditate." I have no desire to interfere with anybody's practice. But if you asked instead, "What other practices do you think meditators could use to facilitate their growth?" then I would answer more or less as I just did.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;In other words, a judicious blend of Eastern contemplative approaches with Western psychodynamic approaches is an interesting and I think healthy way to proceed. And if you want a more comprehensive world view, including both absolute and relative truths, then certainly there are numerous items that the West will bring to the feast. Any of those approaches taken by themselves is demonstrably partial by comparison.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 102, 102);font-family:georgia;" &gt;Incidentally, if you're put off by all this you don't have to come. But everybody has an invitation to this dance, I think. It's a real Shambhala Ball. Seriously. Chogyam Trungpa's Shambhala vision, as I understand it, was a secular and integral weaving of the dharma into the vast cultural currents in which it finds itself. A Brief History of Everything outlines many of those currents and suggests one way that the dharma can enrich-and be enriched by-those currents. This is very simple, I think."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;முழுமைநோக்கு பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளை இப்பகுதியில் பார்த்தோம். முழுமைநோக்கு எவ்வாறு ஒரு தனிமனிதனின் வளர்ச்சிப் பாதையை(Ontogeny), ஒரு குழுவின் வளர்ச்சிப் பாதையை(Phylogeny) விளக்குகிறது என்பதையும் நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற காலகட்டங்களின் முக்கியத்துவம் என்ன என்பதையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;- தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5421002999192488936-5297244887182179348?l=kuranguththavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kuranguththavam.blogspot.com/feeds/5297244887182179348/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5421002999192488936&amp;postID=5297244887182179348' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/5297244887182179348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/5297244887182179348'/><link rel='alternate' type='text/html' href='http://kuranguththavam.blogspot.com/2008/07/2.html' title='பறக்கும் யானையும் மண்ணில் வேரூன்றி நிற்கும் ஒரு பறவையும் - பாகம் 2'/><author><name>Baraka</name><uri>http://www.blogger.com/profile/12445162472826229664</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='14' src='http://bp0.blogger.com/_7TdbNvsYnI8/SEZU-MxQQqI/AAAAAAAAANo/Of3lyg2h3L4/S220/baraka0039.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SHHa4pRJYHI/AAAAAAAAARA/dlufPnOhTp8/s72-c/greatnestofbeing.gif' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5421002999192488936.post-3425136595535979865</id><published>2008-06-26T13:34:00.001-07:00</published><updated>2008-06-29T23:22:45.291-07:00</updated><title type='text'>பறக்கும் யானையும் மண்ணில் வேரூன்றி நிற்கும் ஒரு பறவையும் - பாகம் 1</title><content type='html'>&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;span style="COLOR: rgb(153,153,153); FONT-STYLE: italicfont-size:85%;" &gt;&lt;span style="COLOR: rgb(102,102,102)"&gt;&lt;br /&gt;“The way up and the way down are one and the same” &lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(102,102,102)"&gt;&lt;br /&gt;- Heraclitus&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"இரண்டு குழந்தைகள் விளையாடிக்&lt;br /&gt;கொண்டிருந்தன அந்தப் பூங்காவில்&lt;br /&gt;ஒன்று&lt;br /&gt;ஊஞ்சலில் நின்றும் உட்கார்ந்தும்&lt;br /&gt;ஒற்றைக் காலைத்தூக்கியும்&lt;br /&gt;வேகமாக வீசி ஆடியும்&lt;br /&gt;ஓவென்று கத்திக் கொண்டும் இருந்தது&lt;br /&gt;மற்றொன்று&lt;br /&gt;காலி ஊஞ்சலை வேகமாக&lt;br /&gt;ஆட்டிக் கொண்டும்&lt;br /&gt;ஓவென்று கத்திக் கொண்டும் இருந்தது&lt;br /&gt;எது நல்ல விளையாட்டு என்று&lt;br /&gt;யார் கூற முடியும்?"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;span style="COLOR: rgb(153,153,153); FONT-STYLE: italicfont-size:85%;" &gt;- முகுந்த் நாகராஜன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="COLOR: rgb(153,153,153); FONT-STYLE: italicfont-size:85%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;அறுபதுகளின் காலக்கட்டம். அமெரிக்க ஊடகங்கள் அறுபதுகள்(1960s) என்பதை 1963ல் இருந்து 1973வரையிலான காலகட்டத்தயே குறிப்பிடவதாக கூறுகின்றன. வியட்னாம் யுத்தம் குறித்த அதிருப்தி, எதிர்க்கலாச்சார அலைகள் போன்றவை அங்கு மேலோங்கி இருந்த காலக்கட்டம். 1950களின் முடிவில் அடுத்தடுத்து &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SGP-TRKbTiI/AAAAAAAAAQA/Mfn6EW1ZmZE/s1600-h/H1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5216292400403271202" style="FLOAT: left; MARGIN: 0pt 10px 10px 0pt; CURSOR: pointer" alt="" src="http://2.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SGP-TRKbTiI/AAAAAAAAAQA/Mfn6EW1ZmZE/s400/H1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;வெளிவந்த ‘பீட் எழுத்தாளர்களின்' புத்தகங்கள்(கின்ஸ்பர்கின் ‘Howl', வில்லியம் பரோஸின் ‘Naked Lunch', ஜாக் கெரோஆக்கின் ‘On the Road' போன்றவை) அறுபதுகளில் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை செலுத்தி வந்தன. ஹிப்பி(Hippie) அலை மேலோங்கி இருந்ததும் அக்காலகட்டத்திலேயே. கட்டற்ற சுதந்திரம், இயற்கையோடு ஒன்றியிருத்தல், எவ்வித வன்முறைக்கும் எதிராக குரல் கொடுத்தல், எவ்வித இலட்சியவாதத்தோடும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருத்தல் போன்றவையே ஹிப்பி அலையின் சாரமாக இருந்தது. 'Make love, Not war' என்பது இவர்கள் பிரபலப்படுத்திய ஒரு சொற்றொடர். ஒருவகையில் கிழக்கத்திய நுண் இறைவாதம் (Eastern Mysticism), ஸென் பௌத்தம் போன்றவைகளை அமெரிக்காவில் பிரபலப்படுத்தியதும் இவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று பல அமெரிக்க இளைஞர்களை ஆட்கொண்ட பெரும்கனவு அது. பல்கலைக்கழகங்களில் இருந்து அலைஅலையாக ஒரு முதுகுப்பையை மட்டும் மாட்டிக் கொண்டு ஓரு இடத்தில் இருந்து மற்றொரு இடமாக அலைந்தார்கள். மெஸ்கலைனும், எல்எஸ்டியும் உட்கொண்டு மராக்கேஷ் எக்ஸ்பிரஸைப்(Marrakesh Express) பிடித்து மொரோக்கோவிற்க்கு சிலர் போனார்கள். கித்தாரில் பாப் திலானயும்(Bob Dylan), பீடில்ஸையும்(The Beatles), டோர்ஸையும்(The Doors) வாசித்துக் கொண்டு சிலர் கோவாவில் உள்ள ஆரம்போலுக்கும், அஞ்ஜுனாவுக்கும் சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறுபதுகளின் மத்தியில் உச்சத்தில் இருந்த ஹிப்பி அலை பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேய்வுர ஆரம்பித்தது. பலர் அதிருப்தியோடு அமெரிக்காவிற்கே திரும்பி வர ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் உச்சமாக ஒரு நிகழ்வு டிசம்பர் மாதம் 1969ஆம் ஆண்டு நடந்தது. ‘வுட்ஸ்டாக் திருவிழா' (Woodstock Festival) என்பது வருடந்தோரும் நியூயார்க்கில் உள்ள பெத்தல்(Bethel) என்னும் இடத்தில் நடக்கும் ஒரு மாபெரும் இசைத் திருவிழா. ஒரு முக்கியமான எதிர்க்கலாச்சார நிகழ்வு அது. ஹிப்பிக்களுக்கு ஒரு மெக்கா போல். நான்கைந்து லட்சத்திற்கு மேல் பார்வையாளர்கள் கூட்டம். பல பிரபல ராக் இசைப் பாடகர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் கூடும் திருவிழா. ஹிப்பிக்களின் 'கட்டற்ற சுதந்திரம்', ‘மனவிரிவு' , ‘உலக அமைதி', 'மானுடம் நோக்கி விரியும் அன்பு' போன்றவற்றுக்கு ஒரு வெளிவடிவம் போல&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SGP_B1QxEnI/AAAAAAAAAQY/nHrZ6UR6eHk/s1600-h/w3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5216293200367522418" style="FLOAT: right; MARGIN: 0pt 0pt 10px 10px; CURSOR: pointer" alt="" src="http://2.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SGP_B1QxEnI/AAAAAAAAAQY/nHrZ6UR6eHk/s400/w3.jpg" border="0" /&gt;&lt;/a&gt; அமைவது அந்த விழாவே. நியூயார்க்கில் நடந்த அந்த விழா மாபெரும் வெற்றியடைய அதே போல் ஒரு விழாவை கலிபோர்னியாவில் உள்ள அல்டாமோண்ட்டில்(Altamont) நடத்த முடிவு செய்தார்கள். 'வுட்ஸ்டாக் வெஸ்ட்' (Woodstock West) என்றும் அல்டாமோண்ட் பிரீ கான்ஸெர்ட் (The Altamont Free Concert) என்றும் அது அழைக்கப்பட்டது. மூன்று லட்சத்திற்க்கும் மேல் பார்வையாளர்கள் குழுமியிருந்தார்கள். மேடையில் ரோலிங் ஸ்டோன்ஸ்(Rolling Stones) பாடிக்கொண்டிருந்த வேளையில் மெரிடித் ஹண்டர் (Meredith Hunter) என்ற ஒரு பார்வையாளர் குத்திக் கொல்லப்பட்டார். கொன்றது ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் (Hell's Angels) என்ற ஹிப்பியுகத்தில் போற்றப்பட்ட ஒரு குழுவின் உறுப்பினர். மெரிடித் ஹண்டர் போதை மருந்தின் தாக்கத்தால் தன் சட்டைப்பையில் இருந்த துப்பாக்கியை எடுத்ததால் தான் அந்த ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் உறுப்பினரால் தற்காப்பிற்காக கொல்லப்பட்டார் என்று தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை போலேவே தொடர்ந்து சில கொலைகள். வன்முறைகள். இது ஹிப்பிகளின் நடுவே பெரும் அதிர்வை உண்டு பண்ணியது. சுதந்திரம், அமைதி, மனவிரிவு என்று பேசியவர்கள் இப்படி அடித்துக் கொண்டு சாகிறார்களே என்று பல அமெரிக்க ஊடகங்கள் அவர்களை கேலி செய்ய ஆரம்பித்தன. மெதுவாக பலர் தங்களை ஹிப்பிகளாக அடையாளம் காட்டிக் கொள்ளத் தயங்கினார்கள். போதை மருந்துகளால் ஏற்படும் ‘மனவிரிவு' ('expanding consiousness') போன்றவைகள் மீது அவநம்பிக்கை உருவானது. ஹிப்பியலையும் ஒரு முடிவுக்கு வர ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறுபதுகளின் இறுதிக்காலக்கட்டம் அமெரிக்கர்களுக்கு ஒரு சோதனைக் காலகட்டமாகவே படுகிறது. முடிவேயில்லாமல் போய்க்கொண்டிருந்த ஒரு யுத்தம், கென்னடி, மால்க்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்றவர்களின் படிகொலைகள் மற்றும் ஹிப்பி அலையின் தேய்வு போன்றவை தீவிர அவநம்பிக்கையை அவர்களின் மத்தியில் உண்டு பண்ணியது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல குறிப்பிடப்பட்ட நிகழ்வுகள் அறுபதுகளில் நிகழ்ந்தன. முதல் இருதய மாற்று அறுவைசிகிச்சை, முதல் மினீகம்ப்யூட்டர், BASIC போன்ற நிரழ்மொழி, இணையத்தின் முன்னோடியான ARPANET மற்றும் நிலவில் முதற் காலடி எடுத்து வைத்த அப்போலோ11 குழு போன்ற பல முக்கிய நிகழ்வுகள். இதில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பெரும் பங்காற்றின. எழுபதுகளின் தொடக்கத்தில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் ஹிப்பி மற்றும் எதிர்கலாச்சார அலைகள் கொஞ்சம் ஓய்ந்து புறவய உண்மையை அறிவியல் பார்வை மீண்டும் ஓங்கி எழுந்தது. இதற்கு எதிர் திசையில் செல்லும் பாதைகள் அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்க்கா பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இருபத்தி இரண்டு வயதுப் பையன் ஒருவன் ஈடுபட்டிருந்தான். அதன் முன்பு டியூக் பல்கலைக்கழத்தில் மருத்துவ முன்படிப்பு(Pre-Med) படித்துக் கொண்டிருந்த அவன், மருத்துவப் படிப்பில் காணப்பட்ட தீவிர ஒழுங்கு மற்றும் புறவயப் பார்வையால் அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறி நெப்ராஸ்க்கா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தான். மருத்துவப் படிப்பு தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றதாக இல்லாத்தாலும், தன் கற்பனைத்திறனையே மழுங்கடித்துவிடுகிறது என்று அவன் உணர்ந்ததாலும் அவன் பயோகெமிஸ்ட்ரியில் சேர்ந்தான். அதிலாவது தன் கற்பனையை உபயோகித்து சில செய்முறை ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்று நினைத்த அவனை அவனது பேராசிரியர் பல்கலைக்கழகத்தில் உள்ள தவளைகளை எல்லாம் பிடித்து அதன் கண்களை நோண்டி எடுத்து சில பரிசோதனைகளைச் செய்யச் சொன்னார். இவ்வகை ஆய்வுகளையே தொடர்ந்து ஒரு வருடமாக செய்த அவன் ஒரு நாள் ஆய்வுக்கூடத்துக்குப் போவதையே நிறுத்தினான். புறவயமான ஆய்வுமுறைகளில் உள்ள போதாமைகளை அவன் உணர்ந்தான். அதை மட்டுமே நம்பி எழுதப்பட்ட ஆய்வறிக்கைகளின் முழுமையின்மை அவனை வெகுவாக பாதித்தது. அதே சமயம் இதன் எதிர் திசை என்று அப்போது நம்பப்பட்ட ஹிப்பி அலையும் அவனை ஈர்க்கவில்லை. அதன் போதாமைகளையும் அவன் உணராமல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரு திசைகளிலும் நுழைய விடாமல் தடுத்தது அவனது உள்மனம். பல மாதங்கள் தனது விடுதியறையிலேயே அடைந்து கிடந்தான். பிறகு தீடீரென்று வெறித்தனமாக பல துறைச் சார்ந்த நூல்களை வாசிக்க ஆரம்பித்தான். அப்பொழுது பாஸ்டனில் புதிதாக துவங்கப்பட்ட ‘Shambala' என்ற பதிப்பகம் பல கிழக்கத்திய நுண் இறைவாதம் மற்றும் கிழக்கத்திய தத்துவம் சார்ந்த நூல்களை வெளியிட்டுக் கொண்டு இருந்தது. நெப்ராஸ்க்காவில் தன் விடுதியறையில் இருந்து பல நூறு புத்தகங்களை ஒவ்வொரு மாதமும் தபாலில் ஆர்டர் செய்துக் கொண்டிருந்தான். 'Shambala' அப்பொழுது ஒரு சிறிய பதிப்பகம். அந்த பதிப்பகத்தை தொடங்கிய சாம் பெர்ச்சோல்ஸ்(Sam Bercholz) ஆர்டர் எடுப்பதில் இருந்து புத்தகங்களைக் கட்டித் தபாலில் அனுப்புவது வரை அனைத்து வேளைகளையும் செய்து கொண்டிருந்தார். 'யார் இந்தப் பையன்? இத்தனை புத்தகங்களையும் இவன் படிக்கிறானா? இல்லை சும்மா வாங்கி வாங்கி விற்கிறானா? இத்தனையையும் இவன் படிக்கிறான் என்றால் இவனிடம் இருந்து ஏதோ ஒருநாள் நமக்கு ஒரு செய்தி வரும்' என்று நினைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு வெறித்தமான வாசிப்பில் தொடர்ந்து ஒரு சில மாதங்கள் மூழ்கியிருந்தான். Tao Te Ching போன்றவை அவனை மிகவும் ஈர்த்தது. பௌத்தமுறை தியானத்திலும் ஈடுபட்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது பயோகெமிஸ்ட்ரீ முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு குறித்து பேசும் நாள் நெருங்கியது. துறையின் அனைத்து பேராசிரியர்களும் மாணவர்களும் குழுமியிருந்தார்கள். "Photoisomerization of Rhodopsin in Bovine Rod outer segments" என்பது அவனது ஆராய்ச்சித் தலைப்பு. மேடையேறிய அவன் அவைக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தான். ஆராய்ச்சித் தலைப்பு குறித்து பேசும் முன் தனக்கு பிடித்தமான இன்னொரு தலைப்பு குறித்து சிலநேரம் பேச அனுமதி கோரினான்.&lt;br /&gt;&lt;br /&gt;'உண்மை நிலை மற்றும் யதார்த்தம் என்றால் என்ன? அதை நாம் அறிவது எப்படி?' (What is Reality? And how do we know it?') என்பதே அந்த தலைப்பு. மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய தத்துவம், உளவியல், அறிவியல், நுண் இறைவாதம், மீபொருண்மைவாதம் என்ற பல்வேறு வழிகளின் ஊடாக ‘தூய உண்மை நிலை' என்றால் என்ன என்பதையும் அதை நாம் அறிய நமக்குள்ள சிக்கல்கள் என்ன என்பதையும் அதை மீறி செல்ல நமக்குள்ள பல்வேறு வழிமுறைகள் என்ன என்பதையும் பற்றி கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் விளக்கினான். அவன் விளக்கி முடித்த பின் அனைவரின் முகத்திலும் ஒருவித பிரம்மிப்பு கலந்த மிரள்ச்சியே சில வினாடிகள் நீடித்தது. பிறகு பின் கடைசி வரிசையில் இருந்து ஒரு குரல், "பிரமாதம்! பிரமாதம்! நாம் இப்பொழுது மீண்டும் 'நம்' யதார்த்தத்துக்குச் செல்வோமா? (‘Ah! Wow. Ok Now, Back to reality!')" என்றது. செமினார் அறை சிரிப்பலைகளால் அதிர்ந்தது. அந்தப் பையனாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு தனது விடுதியறையில் இந்நிகழ்ச்சிப் பற்றி அவன் யோசித்தான். தான் எவ்வளவு தான் சிந்தித்து கடுமையாக உழைத்து இத்தகைய உள்விரிவுள்ள தலைப்புகள் குறித்து பேசினாலும் இதற்கு இவ்வகை வரவேற்பே பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகளில் இருக்கும் என்று உணர்ந்தான். தனது பேராசிரியரிடம் தான் முனைவர் பட்டப்படிப்பில் இருந்து விலகிக் கொள்வதாக கூறினான். 'பிறகு என்ன பண்ணப் போகிறாய்', என்று பேராசிரியர் கேட்டார். ‘Consiousness' தொடர்பாக ஒரு புத்தகம் எழுதப் போகிறேன் என்றான் அவன். ‘நீ ஒரு ஹிப்பியாகப் போகப்போகிறாய் என்று சொல்லியிருந்தால் கூட சந்தோஷப்பட்டு உன்னை வாழ்த்தி விடையனுப்பி இருப்பேனே!' என்பது போல் செய்வதரியாமல் பரிதாபமாக ஒரிருநிமிடம் அவனைப் பார்த்தார் அந்த பேராசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலைகழகத்திலிருந்து வெளியேறி பின் அந்தப் பையன் அருகில் உள்ள ஒரு உணவகத்தில் தட்டுகளைக் கழுவுபவனாக(Dishwasher) வேலையில் சேர்ந்தான். பகல் வேலைகளைப் படிப்பிலும் மாலை வேலைகளை உணவகத்திலும் அவன் கழித்தான். அடுத்த பத்து வருடங்களும் அப்படியே. மாதம் உணவுடன் முன்னூறு டாலர்களை அந்த உணவகம் அவனுக்குத் அளித்தது. அதில இருநூறை புத்தகங்களில் கழித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;1973ஆம் ஆண்டு தனது 23ஆம் வயதில் ‘The Spectrum of Consiousness' என்ற ஒரு புத்தகத்தை எழுதி முடித்தான். இருபதுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்களால் அது நிராகரிக்கப்பட்டது. கடைசியில் 1977ஆம் ஆண்டு அந்த புத்தகம் பதிப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில் அது ஒரு சிறிய அதிர்வை உண்டு பண்ணியது. ஹஸ்டன் ஸ்மித்(Huston Smith) போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற பலரால் அப்புத்தகம் பாராட்டப்பட்டது. இருந்தும் கூட பல்கலைக்கழகங்கள் சார்ந்த அமைப்புகளும் (Academia) எதிர்கலாச்சாரச் சந்ததியினரும்(Dominant Counterculture) அப்புத்தகத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை. அதைப் பற்றியெல்லாம் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் அவன் தொடர்ந்து படித்துக் கொண்டும் எழுகிக் கொண்டும் இருந்தான். தட்டுக் கழுவிக் கொண்டே அடுத்தடுத்து ஆறு புத்தகங்களை எழுதினான். அவற்றில் சில 'Shambala' பதிப்பகத்தாலேயே வெளியிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முதல் புத்தகத்தில் ஆரம்பித்து தொடர்ந்து கடந்த இருபத்தைந்தாண்டுகளாக தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பையனைப் பற்றி இன்னமும் பிரபல ஊடகங்களுக்கும், பெரும்பாலான பேராசிரியர்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், பல்கலைக்கழகங்களைச் சுற்றி உள்ள அமைப்புகளுக்கும், எதிர்கலாச்சாரச் சந்ததியினருக்கும் தெரியாது என்பதே உண்மை. ''the most important living philosopher you've never heard of" என்று Salon.com கூறும் அந்தப் பையனின் பெயர் கென் வில்பர் (Ken Wilber).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SGQAEgzo1lI/AAAAAAAAAQg/Th88vkXMus0/s1600-h/ken.jpeg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5216294345927874130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: pointer; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SGQAEgzo1lI/AAAAAAAAAQg/Th88vkXMus0/s400/ken.jpeg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அளவுக்கு கென் வில்பர் உதாசீனப்படுத்தப்பட்டது/படுவது ஏன்? அப்படி என்ன தவறு செய்தார்?&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகளில் மேலோங்கி இருக்கும் தகர்ப்பமைப்புப் பின்நவீனத்துவத்துடனும் (Deconstructive Postmodernism) அதன் மறுமுனையாக இருந்த எதிர்க்கலாச்சாரக் கற்பனைவாதம் சார்ந்த பின்னேற்றத்துடனும்(Romantic Ecoprimitivism) தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள மறுத்தார் என்பதே அந்தத் தவறாகும். பல்கலைக்கழகங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டால் புறவய முறை மற்றும் தகர்ப்பமைப்புப் பின்நவீனத்துவத்துவம் போன்றவற்றோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வருடந்தோறும் புறவய நோக்கில் மட்டுமே எழுதப்படும் ஆய்வரிக்கைகளைப் பதிப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும். ‘பதிப்பி அல்லது செத்து மறி' (Publish or Perish) என்பதை தாரக மந்திரமாக கொண்டுள்ள பல்கலைக்கழக அமைப்புகள் அவரை எவ்வகையிலும் ஈர்க்கவில்லை. இதில் இருந்து வெளியேறுபவர்களில் பெரும்பாலானோர் இதன் மறுதிசையாக இருந்த எதிர்கலாச்சார கற்பனைவாதம் சார்ந்த பின்னேற்றத்துடன்(Romantic Ecoprimitivism) தங்களை இணைத்துக் கொள்வார்கள். இது புறவய நோக்குக்கு மட்டும் அல்லாமல் அறிவுத்துறைக்கே எதிராக இருந்ததாலும் மனம், சுயம் உட்பட எல்லாவற்றையும் உடல், இயற்கை என்று சுருக்குவதாலும் இதனிலும் அவரால் தன்னை இணைத்துக் கொள்ள முடியவில்லை. . இவ்விரு வழிமுறைகளும் முழுமையானவை இல்லை.&lt;br /&gt;இவைகள் எதையும் இரண்டாகப் பிரித்து பிரித்து ஆராயும் இருபொருள்வாத நோக்கு கொண்டவை என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா துறைகளும் பாதைகளும் சில முக்கியமான உண்மைகளை நமக்குத் தருகின்றன. இவ்வித இருபொருள்வாத நோக்கு ஒன்றை முழுவதுமாக ஒடுக்கி மற்றோன்றை மீட்க முயல்கிறது . இவ்வாறு பல்வேறு அறிவுத்துறைகள் பிளவுபட்ட உண்மைகளையே நமக்கு அளிக்கின்றன என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அறிவுத்துறை எப்படி இயங்குகிறது, அது எத்தனை ஒற்றைப்படையாக உலகத்தைப் பார்க்கிறது, எப்படி அது எதிர்மறைக் கருத்துக்களைச் சுருக்குகிறது, அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றறைப் பற்றி ஆழமாக எழுதினார். ஃபிராய்ட் எந்த இடத்தில் நமக்கு உதவுகிறார், பியாஜேவின்(Piaget) முக்கியத்துவம் என்ன, கெப்ஸரும் (Gebser) ஹெபர்மாஸும்(Habermas) கூறுவது என்ன, புத்தரும், ரமணரும் இதில் எப்படி எவ்வித முரண்பாடும் இல்லாமல் பொருந்துகிறார்கள் என்பதை விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கென் வில்பரின் மிக ஆதாரமான நோக்கு ஒன்று உண்டு என்றால் அது ‘எல்லாரும் சரியே' (Everybody is right) என்பதே ஆகும். இந்த நோக்கை, இந்த முறையையே முழுமைநோக்கு(Integral) என்கிறார். எந்தத் தரப்பையும் நிராகரிகாமல் அனைத்தையும் அரவனைத்து மேலெழும் ஒருவகை நோக்கே முழுமை நோக்காகும்(Integral View). இது பின்நவீனத்துவம் கூறும் பன்மைசார் ஒப்புநோக்குவாதம் ('Pluralistic Relativism') போல் தோன்றினாலும் இதற்கும் முழுமைநோக்கும்(Integral) பல முக்கிய வேறுபாடுகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பன்மைசார் ஒப்புநோக்குவாதம் உலகமனைத்துக்கும் பொதுவான உண்மை என்ற ஒன்று கிடையாது என்கிறது. (There are no universal truths). முழுமைநோக்கு(Integral) சமூக மற்றும் கலாச்சார வேறுபாடுகளை ஏற்கிறது. அவைகளை மேற்பரப்பில் தெரியும் தோற்றம் என்கிறது (Sociocultural Surface Structures). மேற்பரப்பில் தெரியும் தோற்றத்தைத்தோடு அனைத்து கலாச்சாரங்களுக்கும் பொதுவான, மாறாத பண்புகளும் (Universal Deep structures) உள்ளன என்கிறது முழுமைநோக்குப் பார்வை(Integral View). உளவியல், சமூகவியல், அறிவியல், தத்துவம், அறவியல், மீபொருண்மைவாதம், ஆன்மீகம் என்று பல தளங்களில் இவற்றைப் பற்றி விவாதித்து மானுடம் அனைத்துக்கும் பொதுவான அன்பு, கனிவு,அறவுணர்வு பற்றி விரிவாக பேசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில தளங்களோடு மட்டும் தங்களை அடையாளப்படுத்திப் பார்த்து திருப்த்தியடைந்து கொண்டவர்களுக்கு இவ்வகை முழுமைநோக்கு பெரும் நகைப்புக்குறியதாகவே தோன்றியது. ஃப்ராய்ட்டியம், வலுவான தன்முனைப்பு (Ego) தான் ஒருவரின் சுயத்தின் (self) ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடிப்படை என்கிறது. புத்தரும், ரமணரும் தன்முனைப்பும், தன்னுனர்வும் தான் ஒருவனின் சுயத்தை அறிய பெரும் தடைகற்களாக இருக்கின்றன என்கிறார்கள். எப்படி இவைகள் பொருந்தும்? நேர் எதிர் பாதைகள் அல்லவா இவை? என்று கேட்டார்கள். வில்பரின் கனவு ஒரு முதிரா மனதின் விபரீத முயற்சி என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான பதில்களை வில்பர் விரிவாகவே தனது புத்தகங்களில் பதிவு செய்துள்ளார். சுருக்கமாக இப்படி சொல்லலாம். ஃப்ராய்டும், பியாஜேவும், புத்தரும், ரமணரும் மனம் என்ற ஒன்றைப் பற்றி பொத்தாம்பொதுவாக பேசவில்லை. நம் மன அமைப்பின் உள்ள வெவ்வேறு அடுக்குகளில் நின்றே மனதைப் பற்றி பேசுகிறார்கள். ஃப்ராய்டும், பியாஜேவும், எரிக்ஸனும் பிறப்பில் இருந்து இறப்பு வரை சுயம் எப்படி படிப்படியாக வளர்கிறது, எப்படிஎப்படியெல்லாம் அது உருமாறி முன்னேறுகிறது, அவ்வழியில் எவ்வகை நோய்க்கூறுகளை, மனக்கோளாறுகளை, சிக்கல்களை எதிர்கொள்கிறது, அந்த சிக்கல்களில் சிக்குண்டு எவ்வாறு அது தத்தளிக்கிறது, அதில் இருந்து மீழ்வதற்கான சிகிச்சை முறைகள் போன்றவற்றைப் பற்றியே பேசுகிறார்கள். அதாவது Pre-Personal நிலையில் இருந்து Personal நிலைவரையிலான தன்முனைப்பின், சுயத்தின், ஆளுமையின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் பற்றியே அவர்கள் பெரும்பாலும் பேசுகிறார்கள். ரமணரும் புத்தரும் Personal நிலையில் இருந்து Trans-Personal நிலை நோக்கி நகர விழையும் சுயத்தின் நகர்வைக் குறித்தே பேசுகிறார்கள். அதாவது தன்முனைப்போடு (Ego) சுயம்/ஆளுமை (Self / Personality) கொள்ளும் குறுகிய அடையாளம் அகன்று விரிவாகிச்செல்லும் பாதையைப் பற்றியே இவர்கள்பேசுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Pre-Personal நிலையில் இருந்து Personal நிலைவரையிலான வளர்ச்சிக்கு தன்முனைப்பின் பங்கு இன்றியமையாதது. தனித்துவம் மிக்க ஒரு ஆளுமைக்கு வலுவான தன்முனைப்பு தேவையான ஒன்றே. இங்கு ஃப்ராய்டும், பியாஜேவும் மற்ற பல உளவியல் அறிஞர்களும், அவர்களின் பலவகைக் கொள்கைகளும்(theories) முக்கியமானவை. அதே போல் Personal நிலையில் இருந்து Trans-Personal நிலைநோக்கி நகர தன்முனைப்பின் இறுக்கம், சுயம் தன்முனைப்போடு தன்னை முழுமையாக அடையாளப்படுத்துதிக் கொள்ளுதல் போன்றவைகள் தளருவதும் அவசியமே. இங்கு ரமணரும், புத்தரும் கூறியவை முக்கியமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல் ஒவ்வொறு துறைகளிலும் பல்வேறு சிக்கல்களை, சேரவே சேராது என்று இருக்கும் பலவித பாதைகளை வில்பர் இனம்கண்டார். இதன் பொதுகூறுகளைக் கொண்டு இவற்றை இருவகையில் பிரித்தார் - &lt;span style="FONT-WEIGHT: bold"&gt;மேற்நோக்கும் பாதை(Ascent) மற்றும் கீழ்நோக்கும் பாதை (Descent).&lt;/span&gt; கீழ்நோக்கு என்பதால் அப்பாதை ஒன்றும் இழிவானது இல்லை. இவ்விரு பாதைகளும் ஒரே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவையே.&lt;br /&gt;&lt;br /&gt;விசையைத் தகர்த்து, விண்ணில் பறந்து, காற்றைக் கிழித்து, காற்றையே உண்டு காற்றோடு காற்றாக கலப்பது ஒருவகை. மண்ணில் பிறந்து மண்ணில் அலைந்து மண்ணிலேயே மகத்துவத்தைக் காணுவது மற்றொரு வகை. முரண்பாடே இல்லாமல் இவ்விரண்டும் இணையும் பாதையே வளர்ச்சிக்கான சிறந்த பாதை என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்நோக்கு மற்றும் கீழ்நோக்கு என்பதை பல இடங்களில் பலவாறு விவரிக்கப்பட்டுள்ளன. அப்போலோ- தியோனாஸிஸ் (Apollo,Dionysus), அலேப்- ஜகீர்(Alaeph,Zahir), சிவன்-சக்தி, சம்சாரா-நிர்வாணா, பிரஜ்னா-கருணா (Prajna-Karuna), யின்-யாங் (Yin-Yang) என்று பல்வேறு பெயர்களில்.&lt;br /&gt;&lt;br /&gt;யின்னும்-யாங்க்கும் முரணில்லாமல் சேரும் நிலையே தாவோ (Tao). பிச்சமூர்த்தியும், நாஞ்சில் நாடனும் ஒருசேரும் புள்ளி போல்.&lt;br /&gt;&lt;br /&gt;- தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5421002999192488936-3425136595535979865?l=kuranguththavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kuranguththavam.blogspot.com/feeds/3425136595535979865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5421002999192488936&amp;postID=3425136595535979865' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/3425136595535979865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/3425136595535979865'/><link rel='alternate' type='text/html' href='http://kuranguththavam.blogspot.com/2008/06/1.html' title='பறக்கும் யானையும் மண்ணில் வேரூன்றி நிற்கும் ஒரு பறவையும் - பாகம் 1'/><author><name>Baraka</name><uri>http://www.blogger.com/profile/12445162472826229664</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='14' src='http://bp0.blogger.com/_7TdbNvsYnI8/SEZU-MxQQqI/AAAAAAAAANo/Of3lyg2h3L4/S220/baraka0039.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_7TdbNvsYnI8/SGP-TRKbTiI/AAAAAAAAAQA/Mfn6EW1ZmZE/s72-c/H1.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5421002999192488936.post-1256046718723353677</id><published>2008-06-20T22:48:00.000-07:00</published><updated>2008-06-20T23:31:39.023-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏன்?'/><title type='text'>வானிலிருந்து விழும் அருவி</title><content type='html'>போன பதிவிற்கு சில மின்னஞ்சல்கள் வந்தன. பெரும்பாலானவை ”இவ்வளவு குழப்பமானதா வாழ்க்கை.. இந்த சண்டைகள், தத்துவப் பிரச்சனைகள் எல்லாம் மேலும் மேலும் வாழ்க்கையை பிரச்சனைப் படுக்கிக் கொண்டே போகின்றனவோ?.. வாழ்க்கை மிகச் சுலமானது என்றே தோன்றுகிறது....  மரநிழலில் வாழ்வதற்கு பதில் பலமாடி கட்டடங்களைக் கட்டி  விட்டு, உள்ளே புழுக்கம் தவிர்க்க, குளிர் பதன சாதனங்களை பற்றி வியாக்கியானங்கள் தருகிறார்களோ என்று தோன்றுகிறது? &lt;span&gt;ரமணரின்&lt;/span&gt; அந்த ஏழு பக்கங்களையே (''நான் யார்?”) என்னால் தாண்ட முடியவில்லை..அதுவே எனக்குப் போதும்...” என்ற மனநிலையை ஒட்டியே வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அவரவர்களுக்கு ஏற்றது எது என்று அவர்களின் உள்ளுணர்வு சொல்கிறதோ அதுவே அவர்களின் பாதை. ரமணரிடமே தன் சஞ்சலங்கள் அடங்கி மனம் அமைதி கொள்கிறது என்ற ஒரு தெளிவு இருந்தால் அதுவே அவர்களின் பாதை. தத்துவங்களை அறியவோ வாழ்வில் உள்ள எண்ணற்ற முரண்பாடுகளை அறியவோ எந்த ஒரு கட்டாயமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஏன் இத்தனை தத்துவங்கள்? ஏன் இத்தனைப் பெரிய பதிவு ?&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையை தத்துவங்கள் complicate பண்ணுகின்றவா? இல்லை நாமே complicate பண்ணிக் கொண்ட வாழ்க்கையை தத்துவங்கள் புரிந்து கொள்ள முயல்கின்றனவா?&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை சுலபம் என்ற புரிதல் ஒருவரிடம் இருந்தம் கூட ஏன் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை மிகுந்த சிக்கல்கள் நிறைந்ததாக உள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;கென் வில்பர் மற்றும் ரமணர் சொல்ல விழைவது வெவ்வேறு தளங்களில் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கென் வில்பரும் கூறியவை பெரும்பாலானது தின வாழ்வின் சிக்கல்களைத் தாண்டி, அதன் அலுப்புகள், கயமைத்தனங்களைத் மீறி மேல்நோக்கிப் போவது பற்றி. சுருக்கமாக 'Relative reality' பற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ரமணர் கூறுவதில் பெரும்பாலாவை  'Absolute reality' பற்றி. 'மரங்கள் அடர்ந்த நிழலில் குடிசை கட்டி' வாழ்வது துறவு மனநிலையை இயல்பாக உடைய ஒருவருக்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். அந்த மனநிலைக்கு வர நாம் லௌகீகத்தில் பல நாட்கள் வாழ்ந்தாக வேண்டும். ஒரு கனி பழுப்பது போல் துறவும் ஒரு நிகழ்வே. அதுவரையில் இந்த 'Relative reality' பற்றிய ஒரு புரிதல் நமக்குத் தேவை. அதிலும் ஒரு நிறைவான, அடர்த்தியான வாழ்க்கையை வாழ்தலே நமக்கு தரப்பட்டுள்ள இந்த வாழ்க்கைக்கு நாம் செய்யும் மரியாதை. அர்த்தம். இந்த இடத்தில் தான் வில்பரும், அரவிந்தரும் உதவுகிறார்கள். கலை இலக்கியமும் இதற்கே. ஜெயமோகன் 'கலை இலக்கியம் எதற்கு' என்ற ஒரு கட்டுரையில் இது பற்றிக் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;”காகா காலேல்கர் இந்திய நதிகளையெல்லாம் சென்று கண்டு சிறந்த பயண அனுபவ நூலை எழுதியவர், தமிழில் அந்நூல் வந்துள்ளது.ஒருமுறை காகா காலேல்கர் ஜோக் அருவியைக் காண காந்தியை அழைத்தார். 'இந்தியாவிலேயே உயரமான அருவி அது' என்றார்.&lt;br /&gt;&lt;p&gt;'நான் வானிலிருந்து விழும் அருவியை சிறுவயதிலேயே கண்டுவிட்டேன்' என்றார் காந்தி.&lt;/p&gt;  &lt;p&gt;உச்சப் படியில் நிற்பவன் யோகி. வாழ்க்கையையே ஒரு யோகசாதனையாக, தவமாக கொண்டவன். வாழ்க்கையை வாழ்க்கையாலேயே நிறைப்பவன்., அதன்பொருட்டு ஒருவாழ்க்கையை ஓராயிரம் வாழ்க்கையளவுக்கு விரிவாக்கிக் கொண்டவன். அவனுக்கும் கலையும் இலக்கியமும் தேவை இல்லை. காந்தி இலக்கியம் படித்தவரல்ல, இசை கேட்டவருமல்ல.பிறருக்கு இலக்கியம் அவர்கள் வாழ்வின் இடைவெளிகளை ஓயாது நிரப்பியபடி பெய்யும் பெரும் பெருக்கு. வெற்றிடங்களை வானமே நிரப்புகிறது என்பது நம் ஞான மரபின் கூற்று. இலக்கியம் கற்பனையின் எல்லையில்லாத வானம். வானமே மழைக்கிறது. மண்ணை நிறைக்கிறது."&lt;/p&gt;தத்துவத்தின், Rhetoricக்கின் தேவையும்  அதே போல் தான். நம்மைப் போன்ற எளியவர்கள் வாழ்வின் வெற்றிடங்களை நிரப்பிக் கொள்வதற்கு!&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;தவிர,  கட்டுரை எழுதப்பட்டது தமிழ்ச் சூழலில் ஒரு சிறு உரையாடலைத் துவக்குவதற்கே. மேலும் மேலும் குழப்புவத்ற்கு அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் Einstein சொன்னது போல், 'Make everything as simple as possible, &lt;i&gt;but not simpler&lt;/i&gt;'.  &lt;p&gt;(நாராயணன் ஒரு நீண்ட பின்னூட்டத்தை &lt;a href="https://www.blogger.com/comment.g?blogID=5421002999192488936&amp;amp;postID=3787040415337687824"&gt;இங்கு &lt;/a&gt;எழுதியுள்ளார். நன்றி).&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5421002999192488936-1256046718723353677?l=kuranguththavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kuranguththavam.blogspot.com/feeds/1256046718723353677/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5421002999192488936&amp;postID=1256046718723353677' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/1256046718723353677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/1256046718723353677'/><link rel='alternate' type='text/html' href='http://kuranguththavam.blogspot.com/2008/06/blog-post_20.html' title='வானிலிருந்து விழும் அருவி'/><author><name>Baraka</name><uri>http://www.blogger.com/profile/12445162472826229664</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='14' src='http://bp0.blogger.com/_7TdbNvsYnI8/SEZU-MxQQqI/AAAAAAAAANo/Of3lyg2h3L4/S220/baraka0039.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5421002999192488936.post-3787040415337687824</id><published>2008-06-18T03:07:00.001-07:00</published><updated>2008-06-20T22:41:58.319-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கென் வில்பர்'/><title type='text'>அறிவியல் ஆன்மீகம் மதம்: கென் வில்பரை முன்வைத்து!</title><content type='html'>சில மாதங்களாகவே ஒரு பதிவை எழுத ஆரம்பித்து அது முடிவேயடையாமல் என்னை ரொம்பவும் படுத்தி எடுத்து விட்டதால் அதை கொஞ்சம் காயப்போட்டு விட்டு வேறு எதையாவது கொஞ்சம் எழுதிப் பார்கலாமே என்ற முடிவுடன் இன்று உக்கார்ந்தால் என்ன எழுதுவது என்றே புரியவில்லை. பிறகு பத்ரி Pseudo-Science மற்றும் New Age பற்றி எழுதச் சொன்னது ஞாபகம் வந்தது. அதைப் பற்றி மட்டும் தனியாக எழுதுவதற்கு பதிலாக அதனோடு தொடர்புடையவற்றையும் சேர்த்து எழுதினால் நன்றாக இருக்கும் என்று பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;தமிழ் வலைப்பதிவுகளை சில காலமாகவே படித்து வருகிறேன். எத்தனை எண்ணங்கள். எத்தனை குழுக்கள். குழப்பங்கள். வம்புகள். சண்டைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரமாக அகம், இந்து தர்மம், உள்ளொளி என்று பேசுபவர்கள் சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளொளி என்ற வார்த்தையைக் கேட்டாலே அதே போல் ஒலியமைப்புள்ள ஒரு தமிழ்க் கெட்ட வார்த்தையை கூறும் நீட்ஸே, ஹெய்டீகர், ஃபூகோ, உடலரசியல் என்று பேசும் சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;'முதலாலித்துவ குட்டையில் ஊறின மட்டைகளே.. குட்டி பூர்ஷ்வாக்காளே..' என்று செல்லமாக மிரட்டும் அதிதீவிர வலதுசாரிகள் ஒரு சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;'பார்ப்பன அடிவருடிகளே.. ஃபாஸிச மலங்களே' என்று திராவிடம், பெரியாரிசம் பேசும் சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றின் நடுவே தடம்தெரியாமல் மாட்டிக் கொண்டு எங்கு செல்வது என்று குழம்பி பிறகு Freakonomics, Tim Harford, James Surowiecki, David Weinberger, Entrepreneurship என்று தங்கள் அடையாளத்தை தேடிச் செல்லும் சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எதுவுமே வேண்டாம் என்று தினவாழ்வு குறித்த அரட்டைகளில் மட்டும் ஈடுபடும் பலர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் நடுவில் சாரு, ஜெயமோகன், எஸ்.ரா, நாகார்ஜுணன் போன்ற எழுத்தாளர்களின் வலைப் பிரவேசம். அவர்களைச் சுற்றி உருவாகும் வாசகர்கள் மற்றும் குழுக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புது வாசகன் இந்த விசித்திர காட்டின் ஊடே எப்படி பயனிப்பான்? எதில் ஆரம்பிப்பான்? எந்த இடத்திற்கு வந்து சேர்வான்? எவ்வழியாக வந்து சேர்வான்? எப்படி வந்து சேர்வான்? காட்டை கடப்பதற்குள் அவன் எத்தனை பாதைகளை கடக்க வேண்டி வரும்? காட்டை கடந்ததாக எண்ணி அவன் அடையும் இடமும் இன்னொரு காடுதானோ?&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சூழலில் மட்டும் தானா இப்படி என்று பார்த்தால் எல்லா இடங்களிலும் உள்ளதுதான் இது என்பது புரியவரும். இந்த பதிவில் New Age, Pseudo Science போன்ற ஒரு சிலதை மட்டும் கொஞ்சம் மேம்போக்காக பார்ப்போம். வரப்போகும் பதிவுகளில் மேலும் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;New-age spirituality ஒரு வகை &lt;span style="font-weight: bold;"&gt;உயர்த்திப்பிடித்தல்&lt;/span&gt;(&lt;span style="font-weight: bold;"&gt;‘Elevationism').&lt;/span&gt; இயற்பியல் உட்பட அனைத்தையும் கடவுள் காரணிகளால் விளக்க முற்பட்டு அனைத்தயும்  உயர்த்திப் பிடிப்பது ஒரு வகை. மற்றோரு வகை Neale David Walsch, Robin Sharma, சுவாமி சுகபோகானந்தா போன்றோர்களால் ஆனது. தியானம் செய்தால் புத்துணர்ச்சி பெருகும்.தியானம் செய்தால் நீங்கள் தினமும் Treadmillஇல் லொங்கு லொங்கென்று ஓடத் தேவையில்லை. ஓம் நமோ நாராயணா என்று நீங்கள் இருநூறு முறை ஜபித்தால் வேலையில் இருந்து கவனம் சிதறாது. உங்கள் மேலதிகாரி உங்களைப் பார்த்து impressஆகி பதவி உயர்வு தருவார், மனம் மூன்று லார்ஜ் அடித்தது போல் relaxஆக காத்தோட்டமாக இருக்கும் என்பது போல் இவ்வகை நீளும். (இதுக்கு நான் மூணு லார்ஜே அடிச்சிட்டு பேசாம இருப்பனே என்று நீங்கள் கேட்பது புரிகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;Pseudo-science ஒரு வகை&lt;span style="font-weight: bold;"&gt; சுருக்குதல் ('Reductionism')&lt;/span&gt;. Mysticism உட்பட எல்லாவற்றையும் இயற்பியலின் மூலம் விளக்க முற்பட்டு அனைத்தயும் பருப்பொருட்களாக(Matter) சுருக்குககுவது இது. Quantum mechanics பற்றி பைபிளில் இந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது. M-Theory பற்றி நடராஜர் சிலையில் பல குறியீடுகள் உள்ளன போன்றவை. கேரி ஷுகாவ் (Gary Zukav) முதல் மணி பௌமிக் வரை பல உதாரணங்கள். இதை எல்லாம் ஆரம்பித்து வைத்த காப்ரா (Capra) பிறகு தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டார். அவருக்கும் கென் வில்பருக்கும்(Ken Wilber) நடந்த விவாதம் Pseudo Science மற்றும் New Age குறித்து பல தெளிவுகளை அளித்தது. அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;New-Age மற்றும் Pseudo-Scienceல் மட்டும் அல்லாமல் தீவிரமான அறிவியல் ஆராய்சிகள் - &lt;span style="font-style: italic;"&gt;Consiousness, Cognitive Science, Transpersonal psychology&lt;/span&gt; பற்றிய ஆராய்சிகளிலும் இது போன்ற தவறுகள் நடக்கின்றன. இதை தவறுகள் என்று ஏன் சொல்கிறேன் என்றால் இவை பிளவுபட்ட ஒரு உண்மையையே நமக்கு அளிக்கின்றன். (முழு முதற் உண்மை தான் எதற்கு வேண்டும்.. அவை நிலபிரபுத்துவ மதிப்பீடுகளால் ஆனது.. ஃபாஸிசத்தில் தான் அது போய் முடியும் என்றும் கேட்கலாம். அதைப் பற்றியும் பிறகு..)&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;யூங் இதில் கூறப்பட்டுள்ள முதல் வகை என்றால் ஃப்ராய்ட் இரண்டாம் வகை. விக்டர் ஃபிராங்கல் முதல் வகை என்றால் லக்கான் இரண்டாம் வகை. ஃப்ராய்ட் id-ego-superego, Infantile regression என்று சுருக்குகிறார் (reductionism). யூங் ஆழ்படிமம் (Archetypes) என்று அதை elevate செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் Cognitive Neuroscienceல் வி.எஸ்.ராமசந்திரன் மற்றும் ஸ்டீவன் பிங்கர் போன்றோர் மனதை (Mind) மூளையாக (Brain) சுருக்குகிறார்கள். ஒரு ஆன்மீக அனுபவத்தை (Mystical experience) மூளையில் உள்ள Temporal Lobesல் நடக்கும் ஏதோ கசமுசா என்று சொல்கிறார்கள். ராமசந்திரன் இவ்வகை சுருக்குதலை மறுத்தாலும் அவரின் ஆராய்ச்சிகள் பலவும் இந்த Mind-Brain சுருக்குதலைச் சுற்றியே உள்ளது .&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆப்பிளை பார்த்தவுடன் மூளையில் சில பகுதிகள் கிளர்ச்சியடைகின்றன என்பதனால் ஆப்பிள் என்ற ஒன்றே கிடையாது ஆப்பிள் என்பதே மூளையின் அந்த பகுதியில் நடக்கும் ஒரு சில நியுரான்களின் சிதறல்கள்தான் (Neuronal Fireworks) என்று கூறமுடியுமா? அதே போல் ஒரு ஆன்மீக அனுபவம் Temporal Lobesல் உள்ள சில பகுதிகளை கிளர்ச்சியடையச் செய்தால் அந்த அனுபவம் ஒரு Mystical experienceஏ கிடையாது அது வெறும் நியுரான்களின் சிதறல்கள் என்று தான் சொல்லமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வசதிக்காக இந்த இரண்டு வகையையுமே நாம் ‘Reductionism / சுருக்குதல்' என்று வைத்துக் கொள்வோம். ஒன்றின் உண்மையான தன்மையை அது இல்லாத வேறு ஒன்றாக சுருக்குதல். இந்த சுருக்குதல்களால் பல பிரச்சனைகள். சேரவே சேராது என்று நம்மை நினைக்க வைக்கும் பல பாதைகள். அதைச் சுற்றி எழும் குழுக்க்கள். அக்குழுக்களின் மீது எழும் அதிகார மையங்கள். சண்டைகள். சச்சரவுகள். மற்றும் பல.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்த தவறுகள் நடக்கின்றன? மேலே குறிப்பிட்ட பலர் பேரறிஞர்கள். மிக முக்கியமான பல கண்டுபிடிப்புகளை நமக்குத் தந்தவர்கள். இருந்தும் ஏன் இப்படி?  பல காரணங்கள் இருக்கக் கூடும். அவ்வறிஞர்கள் இருந்த காலகட்டம் மற்றும் சூழல் ஒரு காரணமாக இருக்கலாம். ஃப்ராய்ட் இருந்த இருக்கமான விக்டோரியன் வியன்னா சூழல் அவரின் ஆராய்ச்சி முடிவுகளை பாதித்திருக்கலாம். ஒரு வித skeptical பின் நவீனத்துவச் சூழலில் உள்ள அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் ராமசந்திரனை பாதித்து இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர வல்லுநர்களுக்கே (Specialist) உரித்தான சில பண்புகளும் இதற்கு காரணமாக இருக்கலாம். 'Small is Beautiful' என்ற புத்தகத்தை எழுதிய E.F. Schumacher இப்படி கூறுகிறார் - “Most specialists normally suffer from a kind of metaphysical blindness, assuming that theirs is a science of absolute and invariable truths, without any presuppositions”.  தனது துறையே தனது ஆராய்ச்சியே மானிட குலத்தின் அனைத்து கேள்விகளுக்கும் பதில்களாக அமையும் என்ற ஒரு நம்பிக்கை. ஒரு வித Metaphysical Blindness. இதில் வேடிக்கை - Metaphysical speculationல் ஈடுபடுவோர்கள் (தத்துவ அறிஞர்கள், மெய்ஞானம் குறித்த உளவியல் ஆராய்ச்சித் துறைகளில் இருப்பவர்கள், மொழியியல் அறிஞர்கள் மற்றும் பலர்) கூட இந்த Metaphysical Blindnessக்கு விதிவிலக்கல்ல. அவர்களையும் இந்த Blindness அலைக்கழிக்கிறது. கடைசி காலத்தில் E.F.Schumacher கூட இதில் சேர்த்தி என்பது ஒரு வித சங்கடமான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;சர்தான்பா..எல்லாருமே தப்புன்னா அப்போ நாம எங்க தான் போறது? இது வரைக்கும் கண்டுபிடிச்சது எல்லாமே தப்புன்னா அப்போ எல்லாத்தயும் குப்பையில போட்டு கொளுத்திட்டு முதல்ல இருந்து ஆரம்பிச்சா எல்லாம் சரியாயிடுமா? என்று கேட்கலாம். கொளுத்தி போடதெல்லாம் போதுமே. அப்படியே கொளுத்திவிட்டு பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்தாலும் நாம் வந்த இடத்திற்க்கே மறுபடியும் வருவதற்கான சாத்தியங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இக்காலம் வரை நமது பல தியரிகளில் பல Methphysical speculationகளில் பல கண்டுபிடிப்புகளில் குறைகள் இருக்கலாம். அவைகள் முழு முதற் உண்மையாக இல்லாமல் இருக்கலாம். அதே போல் அவைகள் முழு முதற் தவறுகளும் இல்லை. கென் வில்பர் சொன்னது போல் ‘I believe No human mind is smart enough and capable of producing 100 per cent error'. இதையே கொஞ்சம் மாற்றிச் சொன்னால் - ‘Everybody is Correct'. (Well, to an extent).&lt;br /&gt;&lt;br /&gt;கொளுத்தி போட்டு விட்டு பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிப்பது அல்ல நம் வேலை. பற்பல துறைகளில் உள்ள எதிர்மறைக் கருத்துக்களையெல்லாம் உள்வாங்கி அதன் மூலம் நம்மால் முடிந்த வரை ஒரு முழுமையான தளத்தை அளிப்பதே. 'Integral' என்பது நம் அரவிந்தரில், நாராயண குருவில் இருந்து பலரும் பல வகையில் பேசி வந்ததே. இது வரையில் ஒரு வித அடைய முடியாத இலக்கு போலவே இருந்தது. ஆனால் இப்பொழுது கென் வில்பர் என்ற ஒருவர் தனது எழுத்தின் மூலம் மிகத் தீவிரமாக அதற்கு ஒரு வடிவத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்னது போல் பல துறைகளில் உள்ள எதிர்மறைக் கருத்துக்களையெல்லாம் உள்வாங்கி அதன் மூலம் முடிந்த வரை ஒரு முழுமையான சித்திரத்தை அளிப்பதே &lt;span style="font-weight: bold;"&gt;‘Integral Approach' &lt;/span&gt;ஆகும். மாறுபட்ட கருத்துக்கள், நாராயண குரு சொன்னது போல், ஒன்றை ஒன்று நிரப்பி, ஒரு முழுமையாண சித்திரத்தை நோக்கிச் செல்கின்றன. இதற்கு பல தளங்களில் ஒருவர் ஆழமாக படித்திருக்க வேண்டும். அப்படியே படித்தாலும் கூட அத்தளங்கள் அளிக்கும் பல நுண்ணிய சிக்கல்கள் மற்றும்&lt;br /&gt;வேறுபாடுகளை உள்வாங்கிக் கொண்டு அதை வைத்துக் கொண்டு ஒரு முழுமையான சித்திரத்திற்கு வந்தடைய ஒரு ஆயுள் போதாது. ஆனால் கென் வில்பர் இதை கொஞ்சம் முயற்சித்துள்ளார். மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய தத்துவங்கள், உளவியல் மட்டும் அல்லாமல் இயற்பியல், உயிரியல், வேதவியல்(அவர் ஒரு BioChemistry மாணவர்.Biochemistry முனைவர் பட்ட ஆய்வில் இருந்து வெளியேறி அடுத்த பத்து வருடங்களில் ஒரு உணவகத்தில் Dishwasherஆக வேலைப் பார்த்துக்கொண்டு 6 புத்தகங்களை எழுதினார்) போன்ற பல துறைகளில் ஆழமாக பயின்றவர். பின் நவீனத்துவம் பற்றிய அழகான புரிதலும் உண்டு. ஆனால் இவை அனைத்தின் போதாமைகளையும் உணர்ந்த அவர் 'Integral Methodological Pluralism' என்ற ஒரு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி முறையை (Research and Praxis Method) உண்டாக்கினார். இதில் Phenomenologyஇல் இருந்து Orienting Generalizationவரை, Gestalt theraphyயில் இருந்து பல வித தியான, யோக முறைகள் வரை , Hermeneuticsல் இருந்து Rogerian Counsellingவரை, Transactional Analysisல் இருந்து Bio-Energetics வரை பல பல வித முறைகள் அடக்கம். எல்லாவற்றையும் கலந்துக் கட்டுக் கொண்டுள்ள ஒரு காக்டெய்ல் அல்ல இது. நம் மன அமைப்பின் பலவித அடுக்குகளுக்கேற்ப பலவித முறைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து கேள்விகளுக்கும் பதில்களிக்கக்கூடிய மாயக்கண்ணாடியே தனது தியரிகள் போன்ற Delusions மற்றும் Metaphysical Blindness அவரிடம் இல்லை. அவர் உருவாக்கிய தியரிகளை ஒருவித வரைபடங்கள் என்றே கூறுகிறார். &lt;span style="font-weight: bold;"&gt;உள்ளடக்கம் அற்ற வரைபடங்களே (Maps &amp;amp; Frameworks devoid of content)அவை. &lt;/span&gt;அவற்றுக்கு வண்ணம் தீட்டுவதும் உள்ளடக்கம் அளிப்பதும் அந்தந்த துறைகளில் உள்ள Specialistகளின் வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;கென் வில்பர் பற்றிய ஒரு அறிமுகப் பதிவை எழுகிக் கொண்டே உள்ளேன். இந்தப் பதிவில் மதம், ஆன்மீகம் மற்றும் அறிவியல் குறித்த அவரின் சில கருத்துக்களை மட்டும் பார்ப்போம். இவை New Age மற்றும் Pseudo Science குறித்து சில தெளிவுகளை நமக்கு அளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;மதம் என்ற சொல்லுக்கு பின் நமக்கு ஒரு பொதுப் புரிதலே உள்ளது. மதம் என்று நாம் குறிப்பிடும் போது எவ்வகை மதத்தை நாம் குறிப்பிடுகிறோம்? அது ஒரு &lt;span style="font-weight: bold;"&gt;தனிநபரை மய்யப்படுத்தும் மதமா (Egocentric religion)&lt;/span&gt;, இல்லை ஒரு &lt;span style="font-weight: bold;"&gt;குழுவை மய்யப்படுத்தும் மதமா (Ethnocentic religion)&lt;/span&gt; இல்லை ஒரு &lt;span style="font-weight: bold;"&gt;உலகமனைத்தயும் அரவணைத்து எழும் மதமா (Worldcentric religion)&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதத்திலும் Egocentricவகை உண்டு, Ethnocentricவகை உண்டு, Worldcentricவகை உண்டு. அதே போல் கிருஸ்துவ, இஸ்லாமிய மதங்களிலும் இந்த மூன்று வகைகள் உண்டு. பழங்குடி மதங்களிலும் உண்டு. செமிடிக்கிலிருந்து பாகன் மதங்கள் அனைத்திலும் இவ்வகைகளைக் காணலாம். இந்த மூன்று வகைகளுமே ஒரு வித கீழிருந்து மேல்நோக்கும் வகைப்படுத்துதல் (bottom-up classification). அதாவது அந்த மதத்தை வழிபடுபவரின், அந்த குழுவின் தன்மைகளில் (generic traits) இருந்து அவ்வகைகள் எழுகின்றன. ஒரு வகையில் இருந்து ஒருவர் இன்னொன்றுக்கு ஒருவர் முன்னேறலாம். இவை ஒருவித &lt;span style="font-weight: bold;"&gt;linear தன்மை கொண்டவை அல்ல&lt;/span&gt;. இந்த வகைகள் &lt;span style="font-weight: bold;"&gt;கடலலைகளைப் &lt;/span&gt;போல். ஒன்றுடன் ஒன்று சிறிது கலந்தே இருக்கின்றன (&lt;span style="font-weight: bold;"&gt;Fuzziness&lt;/span&gt;) . கண்மூடித்திறப்பது போல் ஒருவன் ஒரு வகையில் இருந்து இன்னொரு வகைக்குத் தாவ முடியாது. அவ்வகை திடமான திட்ட வட்டமான வரையரைகளும் இதற்கு கிடையாது. இதை புரிந்து கொள்வது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக &lt;span style="font-weight: bold;"&gt;Egocentric Religion&lt;/span&gt; வகையை ஒரு புரிதலுக்காக இப்படி விளக்கலாம். சிறுவயதில் (எனக்கு காலேஜ் வரையில்) பரிட்சையில் பாசானால் புள்ளையாருக்கு தேங்காய் உடைப்பேன் என்று வேண்டிக் கொள்ளுதல், என்னை ஏமாற்றி ஓடியவன் மீது கடவுள் தான் லாரியை ஏவி விட்டார் போன்ற நம்பிக்கக்கள் ஜோதிடம், செய்வினை, Vodoo போன்றவைகள். தனிமனித ஆசைகளை, ஏக்கங்களைச் சுற்றியே இவை இயங்குகின்றன. Vodooவில் ஒரு தனி மனிதனுக்கு தீங்கு விளைவிப்பதற்க்காக மனித வடிவில் உள்ள பொம்மை மீது ஊசியைக் குத்துவது Egocentric religionக்கு சிறந்த உதாரணம். பிரபல ஊடகங்களில் மதத்தின் பொருட்டு அதிகமாக பேசப்படுபவை இவ்வகையே.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து &lt;span style="font-weight: bold;"&gt;Ethno-centric religion.&lt;/span&gt; இதை பற்றி அதிகம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் தமிழ் வலைப்பதிவுகளில் அதிகம் காணப்படுவது இதுவே. பல அரசியல் மற்றும் மத நிறுவனங்களும் இவற்றைச் சுற்றியே. மற்றோரு குழுவால் மற்றோரு மதத்தால் ஒரு மிகப் பெரிய ஆபத்து தமக்கு தன் மதத்துக்கு தன் குழுவுக்கு ஏற்படப் போகிறது போன்ற ‘Conspiracy theory'க்கள் மீது கண் மூடித்தனமான நம்பிக்கைகள் இவர்களுக்கு இருக்கும். அதற்கான ஆதாரங்களை திரட்டியபடியே இருப்பார்கள். இவை அனைத்துமே Mythologies மீது கட்டப்பட்டுள்ளவை. இவ்வகை வலைத்தளங்களுக்குச் சென்றால் காணக்கிடைக்காத கறுப்பு வெள்ளை மற்றும் பலவர்ண படங்களை நீங்கள் கண்டு மகிழலாம். பல்வேறு அனுமார்கள், கிருஷ்ணபரமாத்மாக்கள், சிவலிங்கம், நடராஜர், ஏசு கிருஸ்து மற்றும் தினசரிகளில் வரும் அரிய செய்திகள், பண்டைய நாணயங்களின் படங்கள் போன்றவைகளை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். இந்திய கொடி ஏந்தி தலையை தலையை ஆட்டிக் கொண்டு மார்ச்ஃபாஸ்ட் செய்யும் சிறுவனையும் நீங்கள் ரசிக்காமல் இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;World-centric Religion&lt;/span&gt; - இவைகளை தாண்டி ஒருவர் செல்லும் போது அடைவது. ஆன்மீகத்திற்கும் மதத்திற்கும் இடையே ஒரு பாலம் போல். Egocentric மற்றும் Ethnocentric போன்ற குறுகிய அடையாளங்களில் இருந்து வெளியேறுவது. இதைப் பற்றி ஜெயமோகன் &lt;a href="http://jeyamohan.in/?p=394"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆன்மீகம், தத்துவம், மதம்&lt;/span&gt;&lt;/a&gt; என்ற ஒரு அழகான கட்டுரையை எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகம் குறித்தும் அறிவியல் குறித்தும் பல தவறான புரிதல்களை நமக்கு பல அமைப்புகளும் ஊடகங்களும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. New Age ஆன்மீக அனுபவத்தை ஏதோ ஒரு ட்ராபியை வெல்வது போல் உயர்த்தித் தூக்கிப் பிடித்துக் கொண்டு உள்ளது. மெய்ஞான அனுபவம் அடைந்த ஒருவன் உலகிலேயே மிக புத்திசாலியாக பலசாலியாக ஆவான் போன்ற பொத்தாம்பொதுவான கருத்துக்கள் அவர்கள் உதிக்க அது அறிவியல் அறிஞர்களைக் கோபம் கொள்ளச் செய்கிறது. ஒரு மெய்ஞானி Third Order Differential Equationயை solve பண்ண முடியுமா, F1 பந்தையத்தில் கலந்து கொண்டு ஜெயிக்க முடியுமா என்று அவர்கள் சவால் விடுகிறார்கள். எல்லாமே ஒரு வித கேலிக் கூத்தாகி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் அறிவியல் அறிஞர்களும் சும்மா இல்லாமல் இந்த உள்ளொளி ஆன்மீக அனுபவம் எல்லாம் சும்மா புருடா. எங்கே நிரூபிக்கச்சொன்னுங்கள் அவர்களை என்று சவால் விடுகிறார்கள். ராமசந்திரன் போன்றோர் ஒரு படி மேலே போய் ஆன்மீக அனுபவத்தையும் Temporal Lobesல் நடக்கும் வானவேடிக்கையாக விளக்க முயல்கிறார்கள்.இந்த குழப்பங்கள் சமூகவியல், மானுடவியல், தத்துவம், இலக்கியம் போன்ற பல துறைகளை பாதித்து உள்ளது. ஒரு வித இரட்டை தன்மையை எல்லா துறைகளிலும் ஏற்படுத்தியது. நம் பிரமிளும் சுந்தர ராமசாமியும் கூட இதனால் ஏதொ ஒரு வகையில் பாதிப்பு அடைந்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை கென் வில்பர் &lt;span style="font-weight: bold;"&gt;Pre/Trans Fallacy&lt;/span&gt; என்கிறார். &lt;span style="font-weight: bold;"&gt;Pre-rational &lt;/span&gt;நிகழ்வை &lt;span style="font-weight: bold;"&gt;Trans-Rational &lt;/span&gt;அனுபவத்தோடு குழப்பிக் கொள்வது. ரோஸ்ஸோ போன்ற கற்பனாவாதிகளில் (Romanticists) இருந்து யூங் போன்ற உளவியல் அறிஞர்கள் வரை இந்த Fallacyல் மாட்டிக் கொண்டவர்கள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக அடிக்கடி நாம் குழந்தைகளை இயற்கையோடு ஒன்றி இருப்பவர்கள், சுயமிழந்து ஆனந்தத்தில் மிதப்பவர்கள் போன்று வர்ணிக்கிறோம். இவை இலக்கியச் சரியாக இருக்கலாம். ஆனால் இவ்வகை elevationism அறிவியல் சரியாக இருப்பதில்லை. Pre-Personal Consiousnessயை Trans-Personalஆக உயர்த்துவதே இது. பியாஜே, மார்கெரெட் மாஹ்லெர் போன்றோரின் குழந்தைகள் பற்றிய ஆய்வுகளில் குழந்தைகள் ஒன்றும் சுயத்தை இழந்து ஆனந்தத்தில் மிதப்பவர்கள் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. சுயமே இன்னும் வளராத ஒரு disassociated நிலையிலேயே அக்குழந்தை உள்ளது. William James அதனை ஒரு ‘Blooming Buzzing Confusion' என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Transpersonal psychology&lt;/span&gt; குழந்ததையின் மனம் சுயமிழந்து தூய நிர்வாண நிலையில் உள்ள ஒன்று என்றே வகைப்படுத்துகிறது. 12-18ஆவது மாதத்தின் போது இரட்டை தன்மைகள் அதற்குள் கூடிகொள்கிறது என்றும் பிறகு வாழ்க்கையே &lt;span style="font-weight: bold;"&gt;‘Return to Innocence'&lt;/span&gt;க்கான ஒரு போராட்டம் தான் என்கிறது Transpersonal psychology. இது கவித்துவச் சரியாக இருக்கலாம். &lt;span style="font-weight: bold;"&gt;Developmental psychology&lt;/span&gt;ஓ சுயமே இன்னும் வளராத குழந்தை எப்படி சுயத்தை இழக்க முடியும் என்று கேட்டது. ‘Return to Innocence'க்குப் பதில் &lt;span style="font-weight: bold;"&gt;'Growth-to- Goodness'&lt;/span&gt; என்ற கருத்தை வைத்தது. இக்கருத்தை நாம் ஏற்றுக்கொண்டால் பலகாலமாக Developmental Psychologyக்கும் Transpersonal Psychologyக்கும் உள்ள உரசலைத் தீர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் &lt;span style="font-weight: bold;"&gt;நவினத்துவம் &lt;/span&gt;Trans-Rational தன்மைகள் அனைத்தையுமே Pre-Rationalஆக சுருக்க நினைத்தது. ஏன் என்றால் &lt;span style="font-weight: bold;"&gt;Trans-Rational, Pre-Rational&lt;/span&gt; இரண்டுமே &lt;span style="font-weight: bold;"&gt;*Non*-Rational. &lt;/span&gt;நவீனத்துவத்திற்க்கும் Rationalityக்கும் உள்ள உறவு தான் நமக்குத் தெரியுமே. தனிப்பட்ட காரணங்கள் தவிர பிரமிளுக்கும் சுராவுக்கும் இருந்த இறுக்கத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஜெயமோகன் தனக்கும் சுராவுக்கும் நடந்த சில உரசல்களைப் பற்றி ‘நினைவின் நதியில்' விரிவாக எழுகியுள்ளார். இதே போல் பல உதாரணங்களைக் கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;Trans-Rationalயை நான் எதற்கு நம்ப வேண்டும்? அனுபவ வாதத்தில், புற வயமாக (Empirically) இதை நிரூபிக்க முடியுமா என்று கேட்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கும் அறிவியல் பற்றிய நமது சுருங்கிய புரிதல்கள் தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தாமஸ் குன் (Thomas Kuhn) '&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;The Structure of Scientific Revolution' &lt;/span&gt;என்ற புத்தகத்தை எழுதினார். அதைப் பற்றி ஒவ்வொருவரும் அவரவர்கள் விருப்பத்திற்கேற்க விளக்கம் கொடுத்தார்கள். ‘Paradigm', Injunction', 'Exemplar' அது இது என்று தங்களுக்கு என்ன தோன்றியதோ தங்கள் நம்பிக்கைக்கு எது ஏதுவாக உள்ளதோ அதைத்தான் அதையேத்தான் குன் கூறினார் என்றார்கள். அறிவியல் ஒருவித சமூகக் கட்டுமானம், அறிவியல் அடிப்படையான உண்மைகள் எதையும் அளிக்கவில்லை.. உண்மைகள் இதுவாக இருக்கக்கூடும் என்ற ஒரு ஊகத்தயே, Interpretationயே தான் அளிக்கின்றன என்றும்.. அறிவியலை ‘paradigms' தான் ஆள்கின்றன, 'paradigms' தான் அறிவியலுக்கு உருவத்தயும் உள் அடக்கத்தையும் அளிக்கின்றன. உங்களுக்கு ஒரு ‘paradigm' பிடிக்கவில்லை என்றால் சட்டை பேண்ட் மாத்துவது போல் ஒரு 'paradigm'இல் இருந்து இன்னொரு ‘paradigm'க்கு மாறலாம் (நீங்கள் மாத்துவது தங்கள் சட்டை பேண்ட் இல்லை..அறிவியலின் சட்டை பேண்ட் போன்றவற்றைப் பற்றிக் கவலைப் படாமல்!). இதிலுல்ல சில கருத்துக்கள் சிறிது காலம் கழித்து ‘பின் நவீனத்துவமாக' விஸ்வரூபம் எடுத்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குன் அடிப்படையில் அறிவியலை பற்றிக் கூறுகையில் அறிவியலின் மூலாதாரமான சில பண்புகளை ‘Scientific Inquiry' மற்றும் ‘Three Strands of Valid Knowledge' என்று விளக்கினார். அவை:&lt;br /&gt;&lt;br /&gt;1) &lt;span style="font-weight: bold; font-style: italic;"&gt;Instrumental Injunction&lt;/span&gt; - இதைத் தான் paradigm, exemplar, practice ordinance மற்றும் பல சொற்களைக் கொண்டு குன் விளக்கினார். அதாவது ‘இதை நீ அறிய விரும்புகிறாய் என்றால், இதைச் செய்' (If you want to know this, Do this). இந்த உப்பு காப்பர் சல்பேட் தான் என்று தெரிந்து கொள்ள இந்த வேதவியல் பரிசோதனைகளைச் செய். இந்த நீர்ன் அடர்த்தியை அரிய இந்த பரிசோதனயைச் செய்.. என்பது போல்.&lt;br /&gt;&lt;br /&gt;2) &lt;span style="font-weight: bold; font-style: italic;"&gt;Direct apprehension&lt;/span&gt; - மேலே நீங்கள் செய்த இந்த பரிசோதனையின் விளைவு. அனுபவப் பூர்வமாக அறிந்த முடிவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;3) &lt;span style="font-weight: bold; font-style: italic;"&gt;Communal confirmation&lt;/span&gt; - வந்த 'result' சரிதானா என்று &lt;span style="font-weight: bold;"&gt;உறுதி செய்ய&lt;/span&gt; உங்கள் வாத்தியாரிடமோ, லேப் அட்டெண்டரிடமோ சரிபார்த்துக் கொள்வது. (முத்துலிங்கத்தின் ஒரு கட்டுரை ஞாபகம் வருகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;இவை ஒரு பள்ளி பாடசாலை ஆராய்ச்சியில் மட்டும் இல்லாமல் எல்லா வகை அறிவியல் ஆராய்ச்சிக்கும் பொதுவான ஒன்று. அறிவியலுக்கே பொதுவான ஒன்று என்று கூட கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை வைத்துக் கொண்டு ஆன்மீக அனுபத்தை Empiricalஆக நிரூபிக்க முடியுமா? இதிலும் ‘Empiricism' என்று நாம் எதை வரையரைக்கிறோம் என்பதில் தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;'Empiricism' என்பது ‘Dogma'க்களை நம்பாமல் அனுபவப் பூர்வமாக நாம் உணர்வது  என்பது ஒரு விளக்கம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நாம் பொதுவாக கண்களால் காண்பவையே ‘Empirical' என்று எண்ணுகிறோம். அவை உண்மை தான். அது &lt;span style="font-weight: bold;"&gt;‘Sensual Empiricism'.&lt;/span&gt; நாம் பார்ப்பது, கேட்பது, சுவைப்பது மற்ற பல. &lt;span style="font-weight: bold;"&gt;‘Eye of the Flesh'.&lt;/span&gt; அனால் நாம் அதோடு நிறுத்திக் கொள்கிறோம். அதில் தான் பிரச்சனையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் Empiricism என்று நாம் எடுத்துக் கொண்டால் Imaginary number 'i'யை Empiricalஆக நாம் நிரூபிக்க முடியுமா? அவ்வள்வு ஏன் -1 போன்ற ஒரு negative numberயை புற உலகில் நம்மால் எங்காவது காண முடியுமா? இயற்பியலில் இருந்து கணிதம் வரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் பலவித குறியிடுகள், சின்னங்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன? ஒரு கணித வல்லுணர்க்கோ ஒரு இயற்பியல் விஞ்ஞானிக்கோ இந்த குறியிடுகளும், சின்னங்களும் ஒரு அழகான சித்திரத்தையே அளிக்கின்றன. இவற்றை நம்மால் ‘Eye of the Flesh'யை உபயோகித்து எங்கும் காண முடியாது. இவை மனங்களிலேயே எழுகின்றன. இவை &lt;span style="font-weight: bold;"&gt;‘Mental Empiricism'. 'Eye of the Mind'.&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;தருக்கம், கணிதம், தத்துவம், Semiotics&lt;/span&gt; போன்ற பலவும் இதில் இருந்தே எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் &lt;span style="font-weight: bold;"&gt;‘Supra Mental Empiricism'.&lt;/span&gt;( ஒரு oxymoron போலத் தோன்றலாம்). அல்லது &lt;span style="font-weight: bold;"&gt;‘Eye of the Spirit'&lt;/span&gt;. ஆன்மீக அனுபவத்தை புரிந்து கொள்ள இதில் தான் முடியும். வார்த்தைகளால் அதைப் பற்றி ஒரு ஒரு வித வர்ணனை வேண்டுமானால் கொடுக்க முடியுமே தவிர அதை நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாது. அதாவது 'SupraMental' அனுபவத்தை ‘Mental Empiricism/‘Eye of the Mind'ல் இருந்து உள்வாங்கிக் கொள்ள முடியாது. 'Eye of the Spirit'இல் இருந்தே முடியும். ‘Contemplation' செய்து நாம் நம் அடியாழத்தில் உணரும் ஒன்றை ஒரு 'Mental Plane'ல் இருந்து உள்வாங்கிக் கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் ஒழுங்காக பதில் சொல்லாமல் டபாய்க்கிறாயா நீ என்று கேட்கலாம். உனக்கு எப்படித் தெரியும்? நீ என்ன கண்டாயா என்றும் கேட்கலாம். தாமஸ் குன்னின் Three Strands தான் நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1) &lt;span style="font-weight: bold;"&gt;Instrumental Injunction&lt;/span&gt; [இதை நீ அறிய விரும்புகிறாய் என்றால், இதைச் செய் If you want to know this, Do this] - &lt;span style="font-style: italic;"&gt;பதஞ்சலி யோக சூத்திரத்தில் இருந்து விபாஸனா வரை , சூஃபி தியான முறைகளில் இருந்து கிருஸ்த்துவ கூட்டுவழிபாடுகள் வரை பல வழிமுறைகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2) &lt;span style="font-weight: bold;"&gt;Direct apprehension&lt;/span&gt; - &lt;span style="font-style: italic;"&gt;தமக்கு சரியானது என்ற பாதை ஒன்றை தட்டுத் தடுமாறி உள்ளுணர்வின் உதவியோடு இனம்கண்டு அதில் பயணிப்பது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஆன்மீக அனுபவத்தை உள்வாங்கி உணர்வது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3) &lt;span style="font-weight: bold;"&gt;Communal confirmation&lt;/span&gt; -&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;உணர்ந்த அனுபவத்தை தன் குருவிடமோ தன் சங்கத்திடமோ (Commune அல்லது Sangha) பகிர்தல். மேலும் பயணித்தல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகை 'அறிவியல், மதம், ஆன்மீகம்' போன்றவற்றைப் பற்றிய நம் பொத்தாம் பொதுவான எண்ணங்கள், ‘Empiricism' பற்றிய நாம் வைத்திருந்த புரிதல்கள் மற்றும் ‘Pre/Trans Fallacy' போன்றவைகளே பெரும் குழப்பங்களை பல்வேறு துறைகளில் ஏற்படுத்தின. ஃப்ராய்ட் ஆன்மீக அனுபவத்தை ‘Regression to Infantile' என்று சுருக்கியது... யூங் Mythology துணைக்கொண்டு Mysticismதுக்கு புதுவர்ணம் கொடுத்து மீண்டும் கொடி ஏற்றியது... காப்ரா ஆன்மீகத்தையும், Mysticismதயும் ‘Mental' empiricismத்தின் துணைக்கொண்டு உள்வாங்க நினைத்து Physicsயை Pseudo-Physics ஆக தேய்வுறச்செய்தது ...ராமசந்திரன் 'Sensory empiricism'ன் துணைக்கொண்டு அதை மேலும் ‘Neuronal Fireworks'ஆக சுருக்க நினைத்தது..இப்படி மேலும் பல சுருக்கங்கள், ஏற்றங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Temporal Lobes நடக்கும் Neuronal Fireworks ஏன் ஆன்மீக அனுபவம் என்று சொல்லப்படும் ஒன்றுக்கு காரணமாக இருக்கக் கூடாதா என்று கேட்கலாம். இது மறுபடியும் ஆப்பிள் பழக் கதைக்கே நம்மைக் கொண்டு செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வில்பர் இதை அழகாக விளக்குகிறார். இது அடுத்த பதிவில் Wilber Maps மற்றும் AQAL பற்றிச் சொல்லும் பொழுது இன்னும் விரிவாகப் புரியும். இப்போதைக்கு இது. உதாரணத்துக்கு &lt;span style="font-weight: bold;"&gt;Polygraph(Lie Detector) &lt;/span&gt;டெஸ்ட்டை எடுத்துக் கொள்வோம்.  நமது Galvanic Skin Response யைக் கொண்டு நாம் பொய் சொல்கிறோமா என்று ஓரளவுக்குக் கண்டுபிடிக்கலாம்.Polygraphயை நாம் ஏமாற்றவும் முடியும். அதை விட்டுவிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பொய் சொல்வதால் நமது Galvanic Skin Response எகிறுகிறதா? இல்லை Galvanic Skin Response எகிறுகிறதால் நாம் பொய் சொல்கிறோமா? ராமசந்திரனின் தருக்கத்தை இங்கு உபயோகித்தால் ‘பொய்' என்ற ஒன்றே கிடையாது, இருப்பதெல்லாம் வெறும் ‘Galvanic Skin Response' தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது பரவாயில்லை. Galvanic Skin Responseக்கு நமது 'Sexual Arousal' உடனும் தொடர்ப்பு உள்ளது.  நாம் Arouse ஆவதால் Galvanic Skin Response எகிறுகிறதா? இல்லை Galvanic Skin Response எகிறுகிறதால் நாம் Arouse ஆகிறோமா?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கும் ராமசந்திரனின் தருக்கத்தை உபயோகித்தால் ‘Sexual Arousal' என்ற ஒன்றே கிடையாதா?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது கிடையுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பதெல்லாம் வெறும் ‘Galvanic Skin Response' தானோ?&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;வில்பர் இதை &lt;span style="font-weight: bold;"&gt;Causation&lt;/span&gt;யையும் &lt;span style="font-weight: bold;"&gt;Correlation&lt;/span&gt;யையும் குழப்பிக் கொள்வதால் வரும் வினை என்று சொல்கிறார்.ஆன்மீக அனுபவத்துக்கும் Temporal Lobesல் நடக்கும் தீப்பொறிகளுக்கும், Galvanic Skin Responseக்கும் Sexual Arousalக்கும் ‘Correlation' மட்டுமே உள்ளது. அதாவது Mindக்கும் Brainக்கும் அல்லது மனசுக்கும் மூளைக்கும் உடலுக்கும் இடையே இணைப்புகள், Correlationகளே உள்ளன. ஒரு EEG கருவியை நீண்ட நாட்களாக தியானத்தில் ஈடுபட்டிருந்த ஒரு புத்த பிக்குவின் மேல் பொறுத்தினால் 'Delta' அலைகளில் வித்தியாசம் தெரியும். ஒன்றை மற்றொன்றின் காரணியாகக்(Cause) கொள்வதே குழப்பத்திற்குக் காரணம். அப்படி சுருக்குவதும் ஒரு வித Reductionism.&lt;br /&gt;&lt;br /&gt;(ராமசந்திரன் இதே போல் ‘Science of the Art' என்ற ஒரு &lt;a href="http://www.sumankumar.com/usability/2004/09/neuro-aesthetics-perceptual-grammar.html"&gt;கட்டுரையில்&lt;/a&gt; ஏன் நமக்கு பிகாஸோ ஓவியங்கள் பிடிக்கின்றன?..என்பது போல் பல நகைச்சுவைக் கருத்துக்களை தீவிரமாகக் கூறியுள்ளார். இதுவும் சுருக்குதலே. ஒருவித Metaphysical Blindness. பிக்காஸொவிலிருந்து பீத்தோவன் வரை அனைவரையுமே மூளைக்குள் அடைத்து நியுரான் மின்னல்களாக காட்டி விடலாம் என்ற ஒரு கனவு)&lt;br /&gt;&lt;br /&gt;கென் வில்பருக்கும் காப்ராவுக்கும் நடந்த உரையாடலில் சிலதை வில்பர் தெளிவாக்குகிறார். ஆன்மீக அனுபவத்தை &lt;span style="font-weight: bold;"&gt;‘Contemplative Tradition' &lt;/span&gt;கூறிய &lt;span style="font-weight: bold;"&gt;வழிமுறைகளின் வழியே (தியானம், யோகம் உட்பட பல்வேறு வகைகள்) மட்டுமே உள்வாங்க முடியும்.தத்துவ விவாதத்தால் முடியாது. ஒரு பொதுப் புரிதலை மட்டுமே அவை உருவாக்க முடியும். அதே போல் கலை இலக்கியத்தாலும் முடியாது. அவைகளில் ஈடுபடுவது ஓர் ஆரம்பமே.&lt;/span&gt; சுயமிழத்தல் போன்ற transient, fleeting நிகழுவுகளே அதில் நிகழ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவை ஒரு முக்கிய ஆரம்பமாக அமையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் ஆன்மீக அனுபவத்தை உள்வாங்கும் பல்வெறு நிலைகளை ஒரு ‘Spectrum' போலவே வில்பர் பார்க்கிறார். இங்கே நாம் இதை பொதுவாக இரட்டை நிலைகளிலேயே பார்க்கிறோம். சுவிட்சு போட்டால் லைட் எரிவதைப் போல் தியானம் செய்து கொண்டே இருக்கும் போது திடீரென முகம் பிரகாசம் ஆகி ஞானடைந்து பின்னால் ஒளிவட்டம் வந்து ரமணரைப் போல் மாறாபுன்னகையோடு இருப்போம் என்பதைப் போல் அன்றி ஒரு வித Spectrum போலவே நம் அனுபவங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன. அதே போல் இது ஏணிப் படிகள் போன்ற 'rigid' ஆன structure/hierarchy கொண்டதும் அல்ல. அலைகளைப் போல். ஆங்கிலத்தில் Flex-Flow என்று சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட முக்கியமாக ஆன்மீக அனுபவம் &lt;span style="font-weight: bold;"&gt;எவருக்கும் எந்த நிலையிலும்&lt;/span&gt; ஏற்படலாம் என்று சொல்கிறார். என்னடா ஆன்மீக அனுபவத்தை ‘Contemplative Tradition' கூறிய வழிமுறைகளின் வழியே மட்டுமே உள்வாங்க முடியும் என்று கூறி விட்டு இப்படி முன்னுக்குப் பின் முரணாகபேசுகிறாரே வில்பர் என்று கேட்கலாம். &lt;span style="font-weight: bold;"&gt;ஆன்மீக அனுபவம் என்பதும் அனுபத்தை 'செரித்து, 'உள்வாங்கி' முன்னேறுவதும் ஒன்றல்ல&lt;/span&gt;. அனுபவம் மின்னல் போல் தான். அந்த சுவிட்சு போட்டால் எரியம் பல்பு போல்தான். திடீரென்று தோன்றி மறையும் fleeting experience. அது எவருக்கும் ஏற்படலாம். இயற்கைக் காட்சியை காணும் போது திடீரென் தோன்றி மறையலாம். நம் சுயம்  பெருவெளியில் கலப்பதை ஒரு ஷணத்தில் நாம் உணரலாம். இது &lt;span style="font-weight: bold;"&gt;Nature Mysticism&lt;/span&gt;.  இல்லை ஒரு கூட்டு வழிபாட்டின் போது எல்லையில்லா கருணை நம் மனதை ஆட்கொள்வதை உணரலாம். உணராமலும் போகலாம். இது &lt;span style="font-weight: bold;"&gt;Deity mysticism.&lt;/span&gt; அதே போல் அனெஸ்தீசியா dosage அதிகமானால்.... கஞ்சா மற்றும் போதை மருந்துகள் உட்கொண்டாலும் சிலவேலைகளில் (Politically Incorrectஆக இருந்தாலும் கூட) உணரலாம். ஒரு Crisis of Faithஇன் போது, மிகுந்த மன இருக்கத்தின் போது... ஏன் ஒருவர் மிகமிக அற்புதமாக கிட்டார் வாசிக்கும் போது சங்கீகத் கச்சேரியில் தன்னை இழந்து ஒருவர் பாடும் போது, கலைஇலக்கியதில் ஈடுபடும் போது.. ஏன் ஒரு கிரிக்கெட் வீரர் அற்புதமாக் விளையாடும் போது ... ஒருவர் மலை ஏறும் போது கூட ஏற்படலாம். அவற்க்கு &lt;span style="font-weight: bold;"&gt;Flow / Optimal experience &lt;/span&gt;என்று உளவியலில் பெயர். இவையும் ஆன்மீக அனுபவங்கள் தான். வில்பரை பொருத்தவரை எந்த ஒரு அனுபவம் நம் சுயத்தின் வேலிகளை விரிவடையச்செய்கிறதோ அவை அனைத்துமே ஆன்மீக அனுபவங்கள் தான். அவற்றின் Intensity/Natureயை பொறுத்து அவை Spectrumஇல் வெவ்வேறு இடங்களில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவை காற்றுப் போல் transient/fleeting அனுபவங்கள். ஒருவித பயிற்சி மற்றும் தியானம், யோகம் மற்றும் Contemplative practice இல்லாமல் இவை permanent traits ஆகாது. &lt;span style="font-weight: bold;"&gt;Gross, Psychic, Subtle, Causal&lt;/span&gt; என்று போகும் பாதை &lt;span style="font-weight: bold;"&gt;Non-Dual &lt;/span&gt;வரை. அதுவரையில் விரிவாகிவந்த வேலிகள் Non-Dualல் இல்லாமல் போகின்றன. இவை எல்லாம் வெறும் Methphysical Speculation அல்ல. தாமஸ் குன்னின் கூற்றுப்படி ஒரு செயலை செய்து(Instrumental Injunction) ஒன்றைக் கண்டடைந்து(Direct apprehension) அதை அத்துறையில் இருக்கும் அறிஞர்களிடம் பகிர்ந்து பரிசீலித்த பின்னரே அவைகள் ஏற்கப்பருகின்றன. &lt;span style="font-weight: bold;"&gt;Psychic, Subtle, Causal, Non Dual&lt;/span&gt; என்பதை &lt;span style="font-weight: bold;"&gt;Laya Samadhi, Savikalpa Samadhi, Nirvikalpa Samadhi, Sahaja Samadhi &lt;/span&gt;என்றும் பலவித Koshaங்களைக் கொண்டும் இந்து மற்றும் புத்த மதங்களிலும் &lt;span style="font-weight: bold;"&gt;Nature Mysticism, Deity Mysticism, Soul mysticism மற்றும் Spirit&lt;/span&gt; என்று கிருஸ்துவத்திலும் கூறப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவை பற்றியும் Waves, Streams, States பற்றியும் மற்றொரு பதிவில் பார்ப்போம். இதில் முக்கியமானது இதுதான். இந்த அனுபவங்கள் எல்லாம் Fleeting என்பதும் அதே போல் ஒருவித பயிற்சி இல்லாமல் இவற்றை permanent traits ஆக்க முடியாது என்பதும் ஆன்மீக அனுபவம் என்பதை விட அதை உள்வாங்கி செரித்துக் கொள்வதே முக்கியம். அதே போல் இது எந்த நிலையில் இருப்பவருக்கும் மின்னல் போல் தோன்றி மறையலாம். Howard Gardner என்ற உளவியல் அறிஞர் &lt;span style="font-weight: bold;"&gt;‘Multiple Intelligence Theory'&lt;/span&gt; என்ற ஒன்றை முன்வைத்தார். அதை கென் வில்பர் கொஞ்சம் செரிவாகினார். அறிவு பல்வேறு Streamகளாக(Logico-Mathematical, Cognitive, Aesthetic, Spatial,Kinesthetic, Moral, InterPersonal, Intrapersonal, Spiritual etc..) ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வளர்ந்து கொண்டே போகின்றன. Cognitive Development மற்றும் Aesthetic Development அதிகமாக இருக்கும் ஒருவனுக்கு Moral Development கம்மியாக இருக்கலாம். உதாரணம் &lt;span style="font-weight: bold;"&gt;பிகாஸோ, பால் காகின், மரியா வர்கோஸ் ஜ்யோஸா.&lt;/span&gt; அதே போல் Logico-Mathematical streamல் அதிக முன்னேற்றம் உடையவர்கள் Interpersonal மற்றும் Kinestheticல் மோசமாக இருக்கலாம். உ.ம். &lt;span style="font-weight: bold;"&gt;John Nash.&lt;/span&gt; இவை பொது விதிகள் அல்ல. தன்மைக்கேற்ப மாறுபடும். அனைத்து சாத்தியக்கூறுகளும் இதில் வரலாம். ஒரு துறையில் தீவிரமாக செயல்படுவதிற்கும் மற்றோன்றை வெறுப்பதற்க்கும் இதுவே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஆன்மீகத்துக்கும் பொருந்தும். Spiritual development அதிகமாக (அதிகம் என்பதை Relativeஆகவே பயன்படுத்துகிறேன்) உள்ள ஒருவரிடம், ஒரு துறவியிடம் கூட Moral Developmentஒ அல்லது InterPersonal Developmentஓ வளர்ச்சியடையாமல், இன்னும் Evolve ஆகாமல் இருக்கலாம். &lt;span style="font-weight: bold;"&gt;கார்லோஸ் &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காஸ்டனேடா (Carlos Castaneda) &lt;/span&gt;புஸ்தகங்களில் வரும் &lt;span style="font-weight: bold;"&gt;Don Juan&lt;/span&gt;, மற்றும் &lt;span style="font-weight: bold;"&gt;Rasputin, Osho &lt;/span&gt;போன்றவர்கள் உதாரணம். செக்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 'சில' சாமியார்களும் இந்த எல்லைக்குல் வரலாம். இவர்கள்&lt;span style="font-weight: bold;"&gt; Psychic levelல்&lt;/span&gt; அகப்பட்டு அதற்கு அடுத்த &lt;span style="font-weight: bold;"&gt;‘Subtle'&lt;/span&gt;க்கு நகர முடியாமல் சிறைப்பட்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் ஒரு Egocentric levelல் இருக்கும் ஒருவன் ஆன்மீக அனுபவம் அடைந்தால் அதை Egocentric values இன் வாயிலாகவே Interpret செய்வான். ஒரு Ethnocentric levelல் இருக்கும் ஒருவன் ஆன்மீக அனுபவம் அடைந்தால் அதை Ethnocentric valuesஇன் வாயிலாகவே புரிந்துகொள்வான். சிறந்த உதாரணம் இன்று நம் கண் முன்னே நடக்கும் மதவாத போராட்டங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பின் நவினத்துவ கூறுகள் சிலவற்றை பார்க்கலாம். நமது அனுபவங்களை நாம் &lt;span style="font-weight: bold;"&gt;பரிதாபமாக உள்வாங்கிக் &lt;/span&gt;கொள்வது மட்டும் இல்லை. அதை நாம் தொடர்ந்து &lt;span style="font-weight: bold;"&gt;Interpret செய்து கொண்டும்&lt;/span&gt; அதற்கு &lt;span style="font-weight: bold;"&gt;அர்த்தங்கள் &lt;/span&gt;அளித்துக் கொண்டும் இருக்கிறோம். &lt;span style="font-weight: bold;"&gt;(Reality is not innocently perceived but actively interpreted and co-constructed).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏன் முக்கியம்? ஆன்மீக அனுபவத்தைச் சுற்றி உள்ள பற்பல &lt;span style="font-weight: bold;"&gt;ஒளிவட்டங்களை இது நீக்குகிறது.&lt;/span&gt; ஒரு serial killer, ஒரு ஏமாற்றுக்காரன், ஒரு சுயநலவாதி, ஒரு paedophile, ஒரு போத்திவேலு பண்டாரம்(ஏழாம் உலகம்) மாதிரியானவர்கள் கூட ஆன்மீக அனுபவத்தை &lt;span style="font-weight: bold;"&gt;(மனம் திருந்தி அல்ல. அவர்கள் அப்போது இருக்கும் நிலைகளில் இருந்தே)&lt;/span&gt; அடைய வாய்ப்புள்ளது என்று சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஆன்மீக ஈடுபாடு உடையவர்களிடத்தே மிகுந்த சஞ்சலத்தை ஏற்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் Streams of Development ஒரு வித 'Center of Gravity'யை தாண்டிய உடன் தான் இந்த Fleeting Transient Traits / Experience ஒரு வித Permananceய் நோக்கி நகர்கிறது என்றும் இது தொடர் பயிற்சியினால் தான் சாத்தியம் என்றும் சில முக்கியமான Streamகள் ஆன Cognitive, Moral, Interpersonal, Intrapersonal, Spiritual போன்றவை ஒருவரினுள் ஓர் அளவைத் தாண்டியவுடன் தான் ஆன்மீக அனுபவத்தை ஒருவரால் உள்வாங்கி செரித்து மேல்நோக்கி பயனிக்க முடியும் என்றும் கூறுவதால் இவற்றை பற்றி நாம் கொஞ்சம் யோசித்து ஆன்மீகம் குறித்த நம் பழைய கருத்துக்களை விவாதித்து மறுஆக்கம் செய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையே மேற்கொண்டு ஒரு விவாத தளத்தில் எடுத்துக் கொண்டால் அறிவியல் ஆன்மீகம் மதம் மற்றும் நவீனத்துவம்/பின்-நவீனத்துவம் குறித்த பல வேறுபாடுகளை நாம் சிறிது தளர்த்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி செய்வதே நல்லது. அதுவே சங்கரர், புத்தரில் இருந்து ரமணர் வரை, அரவிந்தரில் இருந்து கிருஷ்ணமூர்த்திவரை வரை, பிளாடினஸில் இருந்து ஷெல்லிங் வரை,  தல்ஸ்த்தாயில் இருந்து கசான்ஸாகிஸ் வரையிலான முதியோர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. இவையே இன்றைய நம் சூழலில் காணப்படும் அதீத மோதல்களையும், குழுமனற்பான்மையையும் கொஞ்சம் தளரச்செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை சொன்ன அனைத்துமே பொய்கள் தான். Non-Dual/Sahaja Samadhi/Spirit நிலையில் இருந்து பார்க்கும் பொழுது. அந்த ஒரு Absolute நிலையில் இந்த Relative Reality அர்த்தம் இழக்கிறது. பிறகு எதற்கு இத்தனை வியாக்கியாணம்?&lt;br /&gt;&lt;br /&gt;Relative Realityல் தான் நாம் உலாவிக் கொண்டும் தத்துவங்களை எழுப்பிக் கொண்டு உள்ளோம். அதைப் பற்றிய புரிதலும் அவசியமே.&lt;br /&gt;&lt;br /&gt;இது போல் ஆன்மீகத்துக்கு இடம் சுட்டி பொருள் விளக்கம் தருவது பலருக்கு உவப்பானதாக இருக்காது. எனக்கும் தான். ஆனால் நம் சூழலில் உள்ள புரிதல்களைக் கொஞ்சம் செரிவாக்க, ஒருவித விவாதத்திற்கான தளத்தை உருவாக்க இது உதவினால் எனக்கு மகிழ்ச்சியே. ஆன்மீகம், மதம் பற்றி கவித்துவமான நடையிலும் எழுதலாம். வேண்டுமென்றே தான் இந்த மாதிரி ஒரு உணர்ச்சியற்ற நடையை தேர்ந்தெடுத்தேன். கொஞ்சம் சங்கடமாகத் தான் இருந்தது. ஆனால் இப்பதிவுக்கு இந்த நடையே சரி என்று பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இது போன்ற ஒரு Integral Approachக்குக்கான தேவை தான் என்ன? ஒரு Knowledge Society/Information Societyஇல் அறிவுத்துறைகளே அதிகார மையங்களாக மாறுவதற்கான சந்தர்பங்கள் வலுவாக உள்ளன. அறிவுத்துறைகள் இது போன்ற சுருக்குதல்கலால் பிளவுபட்டு binary oppositionகளாகவே உள்ளன. அந்த வகை Reductionist, Fragmented உண்மைகளே மாறாத்தத்துவங்களாக, அமைப்புளாக நம்மை நசுக்குகின்றன. நேற்று உளவியலில் இருந்த இந்த சுருக்குதல்தன்மை இன்று Economicsக்குள் புகுந்துள்ளது. Economicsஓடு Behaviourismமும் கைக்கோர்த்து Behavioural Economicsஆக இன்று பல அதிசியத்தக்க ஆராய்சிகளை செய்து வருகிறது. முதல் தடவை படிக்க பிரமிக்கச் செய்கிறது. கொஞ்சம் யோசித்து மறுபடி படித்தால்  அதன் போதாமைகள், சுருக்குதல்தன்மை போன்றவை புரிகின்றன. Tim Harfordன் ‘Logic of Life'இல் வரும் &lt;a href="http://www.slate.com/id/2148583"&gt;இந்தக் கட்டுரையை&lt;/a&gt; மீண்டும் ஒரு முறை வாசித்து கொஞ்சம் யோசியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை படித்தீர்கள் என்றால் மிக்க நன்றி. சிலர் பாதியிலேயே ஃபாஸிச மலம் நிலபிரபுவுத்திவ மதிப்பீடுடைய பார்பனீயக் குப்பை என்றோ Pseudo-Secular கயமைத்தனம் என்றோ வெறுத்து ஒதுக்கியிருக்கலாம். எதற்கு இந்த மாதிரி பிளவுபடா உண்மை பற்றிய கனவுகள்? ஒரு வகையில் இவை totalitarianism தானே என்று கேட்கலாம்? அது போன்ற totalitarian கனவுகள் தானே perennial philosophy ஆக நம் மக்களை நசுக்கியது? அவை தானே தடம் மாறி ஹிட்லரிலும் மாவோவிலும் ஸ்டாலினிலும் புஷ்ஷிலும் முடிந்தது? ஏன் இன்னமும் இந்த , பிளவுபடா உண்மைக்கான கனவு? எதற்க்காக அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு அர்தத்தைக் கற்பிக்கத் துடிக்கும் பேராசை?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்றால் 'Man is condemned for meaning'. Condemned to find big picture.&lt;br /&gt;&lt;br /&gt;Big picture, Grand narrative எல்லாம் கூடாது என்று கூறும் பின் நவீனத்துவம் கூட ஒரு Big pictureயையே அளிக்கிறது. Big picture கூடாது என்ற ஒரு Big pictureயை அளிக்கிறது. Grand Narratives கூடாது என்ற Grand Narrativeயையே அளிக்கிறது. Hierarchy, Absolute values கூடாது என்ற ஒரு hierarchyயை, valuesயை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நவீனத்துவம், பின் நவீனத்துவம் மற்றும் Perennial Philosophy போன்றவற்றைப் பற்றி கென் வில்பர் என்ன கூறுகிறார் என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;அன்றாட சலிப்புகளினிடையே ஊடாடும் நம் வாழ்க்கைக்கு இவையே வர்ணங்க்ளை அளிக்கின்றன . பூங்காக்களில் உலாவுவதை விட காட்டில் தேடி அலைவதே நமக்கு ஒரு நிறைவை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(பி.கு: அதிகப்படியான ஆங்கிலக் கலப்பு தமிழில் என் போதாமைகளினாலேயே.  அவற்றுக்கு கலைச்சொற்கள் என்னவென்று சொன்னால் மிக்க உதவியாக இருக்கும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5421002999192488936-3787040415337687824?l=kuranguththavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kuranguththavam.blogspot.com/feeds/3787040415337687824/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5421002999192488936&amp;postID=3787040415337687824' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/3787040415337687824'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/3787040415337687824'/><link rel='alternate' type='text/html' href='http://kuranguththavam.blogspot.com/2008/06/blog-post_18.html' title='அறிவியல் ஆன்மீகம் மதம்: கென் வில்பரை முன்வைத்து!'/><author><name>Baraka</name><uri>http://www.blogger.com/profile/12445162472826229664</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='14' src='http://bp0.blogger.com/_7TdbNvsYnI8/SEZU-MxQQqI/AAAAAAAAANo/Of3lyg2h3L4/S220/baraka0039.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5421002999192488936.post-3623461832597649508</id><published>2008-06-03T23:33:00.000-07:00</published><updated>2008-06-04T02:02:34.789-07:00</updated><title type='text'>புல்வெளி</title><content type='html'>அப்போ நான் எட்டாங்கிளாஸ். புது ஸ்கூலில் சேர்த்திருந்தார்கள். இரண்டு மணிக்கே ஸ்கூல் முடிந்து விடுவதால் சும்மா ஜாலியாக தூங்கிக் கொண்டும் டிவி பார்த்துக் கொண்டும் இருந்த என்னைப் போய் பக்கத்தில் உள்ள ஒரு டென்னிஸ் கிளாஸில் என் பெற்றோர் சேர்த்திருந்தார்கள். நடுத்தர குடும்பமான எங்களுக்கு டென்னீஸெல்லாம் கொஞ்சம் அதிகப்படி தான். என் cousin மாவட்ட அளவு கால்பந்து வீரன். அதனால் ஒரு கெத்துக்காக நானும் வேண்டா வெருப்பாக போய் வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டென்னிஸ் கோச் மைதானத்தைச் சுற்றி பத்திருவது தடவை ஓட வைப்பார். தினமும் 10 நிமிடம் டென்னிஸும் 40 நிமிடம் ஓட்டமும்!  என்னாடாப்பா இது, டென்னிஸ் கோச்சிங்கா இல்ல ஓட்டப்பந்தயத்துக்குக் கோச்சிங்கான்னு புறியாமல் செம கடுப்பில் ஓடிக்கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது பெயர் தெரியாத சொகுசு காரில் டென்னிஸ் மட்டை உயரமே இருந்த ஒரு சிறுவன் வந்திறங்கினான். இன்னும் தூக்கம் கலையாத முகத்துடன் மட்டையயும் தண்ணி பாட்டிலயும் தரதரவென இழுத்துக் கொண்டு வந்தான். அவன் வரும் விதத்தைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்து அதை கோச்சாரும் பார்த்துத் தொலைக்கவே எனக்கு அன்று நல்ல பந்துகளில் இருந்து குழி விழுந்த மொக்கை பந்துகளை பிரிக்கும் வேளை கொடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அவன் ஃபோர்த்து கிரேடில் மாற்று-முறைக் கல்விக்குப் பெயர் போன  உயர்ரகப் பள்ளியில் படிக்கிறான் என்றும் டென்னிஸ் கிளாஸில் அவன் தான் ஆகப்பெரிய ஜோக்கர்க்கோமாளி என்றும் அறிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சீருடை அணிந்த காரின் ஓட்டுனர் உலுக்குஉலுக்கு என்று உலுக்கின பிறகுதான் துயில் எழுவான். அதன் பின் அரைத் தூக்கத்தில்லேயே warm-up செய்து அரைத் தூக்கத்தில்லேயே jogging முடித்து அ.தூக்கத்தில்லேயே forehand/backhand பயிற்சி முடித்து அ.தூக்கத்தில்லேயே volleyயும் முடித்து அ.தூக்கத்தில்லேயே கோச் கொடுக்கும் தண்டனையையும் நிறைவேற்றி விட்டுக் கிளம்புவான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாளும் அவன் யாருடனும் பேசிப் பார்த்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அன்று பயிற்சி முடித்து கிளம்பத் தயாராக இருந்தேன். பயிற்சி முடித்ததும் அடுத்த வினாடியே இன்னும் கொஞ்சநேரம் ஓடகீட கோச் சொல்லிவிடுவாரோ என்று பயத்தில் ஒழுங்காக கிளம்பி விடும் நான்  அன்று என் போதாத நேரத்தால் நெட் அருகே நின்று கொண்டு மற்றவர்கள் பயிற்சி செய்வதை பராக்குப் பார்த்துக்கொண்டு இருந்தேன். அரைத்தூக்கவாசி தான் விளையாடிக் கொண்டு இருந்தான். Marker போடும் ஒவ்வோரு பந்தையும் விளாசிக் கொண்டு இருந்தான். அவை அனைத்தும் பக்கத்துக் கோர்ட்டிலேயே விழுந்துக் கொண்டு இருந்தது. கடுப்பாகிக் போன Marker இன்னும் வேகவேகமாக அடுத்தடுத்து பந்துகளை வீசினார். அவனும் சளராமல் பந்தை பக்கத்து கோர்ட்டுக்கே அனுப்பிக் கொண்டு இருந்தான். இந்த அலகிலா விளையாட்டை நானும் பார்த்துக் கொண்டே இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென அவனது டென்னிஸ் மட்டை கைத்தவறி பறத்து அந்த வேகத்தில் சுழன்று சரியாக என் மீது விழுந்தது. அடி எல்லாம் ஒரு மண்ணும் இல்லை. ஆனால் இந்த தீடீர்த் தாக்குதலால் நிலை குலைந்த நான் தரையில் கிடந்தேன். பிறகு எம்பி நின்று சட்டையை உதறி நின்றபோது கோச் செமத்தியாக அ.தூவை வைதுக் கொண்டு இருந்தார். இஷ்டமில்லைனா வராதே... .. பாரு உன்னால் ஒருத்தனுக்கு அடி...வந்து எதுக்கு இப்படி எல்லார்க்கும் இம்சை கொடுக்குற.. என்று சொல்லிக்கொண்டே போனார். கோச்சிடம் அடியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லலாம் என்று நினைத்து ... இதை வைத்தே நாளை மட்டம் போடலாமே என்ற திடீர் ஞானோதயம் ஏற்பட நான் பேசாமல் இருந்தேன். அ.தூவை 10 ரவுண்ட் வெளி மைதானத்தில் ஓட கட்டளையிட்டார். வழக்கம் போல் அவன் எந்த பதிலும் பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று கோச்சார் என்னை கூப்பிட்டார். அடி கிடி பட்டிருந்தா நாளைக்கு ஒண்ணும் வரவேணாம்முன்னு சொல்லப் போறார் என்று எதிர்பார்த்துக்கொண்டே போனேன்.  அதான் போன பத்தியிலேயே போதாத காலம் என்று சொன்னேனே.. அப்படி சொல்லிவிட்டு எப்படி நான் இந்த மாதிரி எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு போகலாம்? உன்னை எவன்டா Net கிட்ட நிக்க சொன்னான்...அதான் சிமெண்ட் பெஞ்சு இருக்குள்ள.. அங்க உக்காந்து பாக்குரதுக்கு உனக்கு என்ன வலிக்குதா என்று என்னையும் போட்டு வறுத்தெடுத்தார். விட்டால் ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓட வேண்டும் போல் இருந்த என்னையும் அரைத்தூக்கவாசியோடு ஓட கட்டளையிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளி மைதானத்தைச் சுற்றி 10 ரவுண்டுகள். எனக்கு அப்படியே பொங்கிக் கொண்டு வந்த துக்கம் தொண்டயை அடைத்தது. அடி பட்டு விழுந்து கிடந்தவனிடம் கொஞ்சம் கூட கரிசனமாக பேசாமல் இப்படி ரவுண்டடிக்க விடுகிறார்களே என்று எண்ணி எண்ணி ஆத்திரமும் அழுகையும் மற்ற என்ன என்னவோ உணர்ச்சிகளும் வந்து கொண்டே இருந்தன.  டேய் நான் உன்ன ஓடசொன்னனே..ஓடாம எண்ண பேன்னு நின்னிட்டு இருக்கே என்று கோச்சார் கத்த வந்த உணர்ச்சிகளையெல்லாம் கட்டுப்படுத்தி வெளி மைதானத்தில் ஓடத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இந்த கதியை ஏற்படுத்திய எதிரி தூரத்தில் ஓடிக்கொண்டு இருந்தது. மூச்சைப் பிடித்து ஒடி வந்து  அதன் பின் பக்கத்தில் ஒரு உதையையும் தலையில் ஒரு குட்டும் கொடுத்தேன். தூக்கத்திலிருந்து விழித்து என்னை பார்த்து சாரி என்றது.  காலுடைந்த ஆடு ஒன்று ஓடுவதைப் போலவே இருந்தது அவன் ஓட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;மைதானத்தின் மறு ஓரத்தில் இருந்தோம். நான் அவனை பிடித்து இழுத்து நிறுத்தினேன்.  இந்த இடத்தில் நாம் இருப்பது கோச்சுக்குத் அங்கிருந்து தெரியாது. அதனால் இங்கு நாம் நடப்போம். மறு கோடியில் திரும்பவும் ஓடுவோம் என்று என் எட்டாங் கிளாஸ் குறுக்குபுத்தியை ஃபோர்த் கிரேடுக்கு புகட்ட முயன்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் ஒரு கம்பிளிப்பூச்சிப் போல் வளைந்து வளைந்து நடத்து கொண்டிருந்தான். டேய் கோணக்காலா.. ஒழுங்கா நடக்க தெரியாதா உனக்கு என்று சீண்டியபடியே இருந்தேன்.திடீரென ஒரு இடத்தில் அவன் நின்றான். கீழே குனிந்து புல்லில் இருந்த என்னத்தயோ எடுத்தான். எதோ ஒரு சின்ன அழுக்கு காலி பாக்கெட். மிகச் சின்னதாக Pizzaவுடன் வரும் Chilly Flakes பாக்கெட் போல இருந்தது. அதன் மேல் இருந்த எழுத்துக்கள் அழிந்திருந்தன. ஒரு முழு நிமிடம் அதனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'டேய்..அத கீழப்போடுடா..அழுக்கு..‘ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இது என்னவென்று தெரியுமா' என்று ஆங்கிலத்தில் கேட்டான். அவன் பேசி நான் கேட்கும் முதன் வாக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏதோ பாக்கெட்டா...நீ அதை கீழ போடு..நேரம் ஆது.. கோச் பாத்தா அவ்ளோதான்‘&lt;br /&gt;&lt;br /&gt;'இது Grass' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆங்...என்னாது?'&lt;br /&gt;&lt;br /&gt;‘Grass'&lt;br /&gt;&lt;br /&gt;'டெய்...நீ கோணக்காலு தூங்குமூஞ்சின்னு தான் நினைச்சேன்.. நீ லூசு கூடவா..பாக்கெட்ட போய் Grassனு சொல்ற... புல்லுல்ல இருந்து எடுத்தா அதுவும் புல்லா?..அது செரி...மவனே இன்னும் ஒம்போது ரவுண்ட் போனும்... உன் ஸ்கூல்ல எக்ஸாம் கிக்ஸாம்லாம் கிடையாது.. எனக்கு நாளைக்கு பிஸிக்ஸ் டெஸ்ட்டு....” என்று அவனை திட்டி விட்டு ஓடத்தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் கால் வலி என்று பிஸிக்ஸ் டெஸ்ட்டுக்கும் அப்படியே டென்னிஸ் கிளாசுக்கும் மட்டம் போட்டேன். படிப்பு தான் முக்கியம் என்றும் டென்னிஸுக்கெல்லாம் போய் படிப்பைக் கெடுத்துக் கொள்ள கூடாது என்றும் இனிமேல் டென்னிஸ் கின்னிஸெல்லாம் ஒன்றும் போக வேண்டாம் என்றும் அப்பா சொன்னார். நானும் கண்ணீர் வர சம்மதித்து பிறகு  மூன்றில் இருந்து அப்பா வரும் ஆறு மணி வரை  வரும் உலக மகா யுத்தமான WWF Wrestlingயையும் பார்த்து விட முடியுமென்ற நினைவு வந்து சந்தோஷம் இரு மடங்காக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு பல வருடங்கள் கழித்து பொறியியல் முதலாம் ஆண்டு இறுதியில் T-Joint/V-Joint/புறாவால்-Joint என்று ஏதேதோ 'Joint' பற்றி Workshop வாத்தியார் சொல்லும் பொழுதெல்லாம் பின்னால் எழும் சிரிப்பொலிகளினிடையே Grass-ன் அர்த்தத்தைக் கண்டடைந்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5421002999192488936-3623461832597649508?l=kuranguththavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kuranguththavam.blogspot.com/feeds/3623461832597649508/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5421002999192488936&amp;postID=3623461832597649508' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/3623461832597649508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/3623461832597649508'/><link rel='alternate' type='text/html' href='http://kuranguththavam.blogspot.com/2008/06/blog-post_03.html' title='புல்வெளி'/><author><name>Baraka</name><uri>http://www.blogger.com/profile/12445162472826229664</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='14' src='http://bp0.blogger.com/_7TdbNvsYnI8/SEZU-MxQQqI/AAAAAAAAANo/Of3lyg2h3L4/S220/baraka0039.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5421002999192488936.post-2880241719015897715</id><published>2008-06-03T07:35:00.000-07:00</published><updated>2008-06-03T07:37:29.395-07:00</updated><title type='text'>பறக்கும் யானையும் தியானிக்கும் குரங்கும்...</title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5421002999192488936-2880241719015897715?l=kuranguththavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kuranguththavam.blogspot.com/feeds/2880241719015897715/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5421002999192488936&amp;postID=2880241719015897715' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/2880241719015897715'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5421002999192488936/posts/default/2880241719015897715'/><link rel='alternate' type='text/html' href='http://kuranguththavam.blogspot.com/2008/06/blog-post.html' title='பறக்கும் யானையும் தியானிக்கும் குரங்கும்...'/><author><name>Baraka</name><uri>http://www.blogger.com/profile/12445162472826229664</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='14' src='http://bp0.blogger.com/_7TdbNvsYnI8/SEZU-MxQQqI/AAAAAAAAANo/Of3lyg2h3L4/S220/baraka0039.jpg'/></author><thr:total>2</thr:total></entry></feed>
